Skip to main content

Posts

Showing posts from May, 2025

கோழையின் காதல் - சிறுகதை

 இந்தா இந்த காப்பு ரெண்டையும் போடு… உனக்கு ஒன்டும் போடாம வெளிக்கிடுத்தி கொண்டு வந்திருக்கிறன் என்டு உன்ர கொப்பர் என்னை தான் திட்டுவார்.. கெதியா வெளிக்கிடு…’ என்று அவசரப்படுத்திவிட்டு போகும் தாயை பார்க்க எரிச்சலாக இருந்தது அவளுக்கு. காத்திருந்து அவரசமாக கன்னத்தில் விழுந்து கரை புரண்டோடிய கண்ணீரை துடைத்துக்கொண்டு தாய் கொடுத்த வளையல்களை எடுத்து கையில் மாட்டினாள் அவள். அவளுடைய பெரியம்மாவின் மகளின் திருமணம் இன்று. வீட்டில் எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். பல மாதங்களாக இந்த திருமண நாளிற்காக அவள் கூட காத்திருந்தாள்தான். அக்காவின் திருமணம் என்றால் அது பெரிய கொண்டாட்டம் தானே? திருமண பேச்சுதொடங்கிய நாளிலிருந்து ஒரே கொண்டாட்டம் தான். ஆனால் இன்று அங்கு போகும் மனநிலை இல்லை அவளுக்கு. கையினுள் நுழைய மறுக்கும் வளையலை அழுத்தி தள்ளினாள், அந்த மெல்லிய வளையல் அவள் அழுத்திய வேகத்தில் சற்று நெளிந்து கையின் மணிக்கட்டை கீறியது.. ‘ஸ்ஸ்ஸ்…’ என்று கையை உதறியபடி கண்ணாடிமுன்னால் கிடந்த கதிரையில் அமர்ந்தாள். தொண்டைக்குழியில் நெருப்பால் சுட்டது போல் ஓர் வலி, கண்கள் எரிந்து கொண்டு பொறுமையிழந்த கண்ணீர் வெளிய...

சந்தித்த வேளை! (சிறுகதை)

  நேரம் இரவு  10.00  மணியை தாண்டிக்கொண்டிருந்தது. யாழ் பேருந்து நிலையம். அங்காங்கே வீதி விளக்குகள் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தன. சாப்பாட்டுக்கடைகள் மாத்திரம் கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. ஒன்றிரண்டு ஆட்டோக்கள் வேறு மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக தயாராக நின்றன.    அதிலும் ஒரு கடையில்  ‘ ஒலிக்கவிருக்கிறது எஸ்பிபி பாலசுப்ரமணியம் மற்றும் சித்ராவின் குரலில் சிகரம் திரைப்பட பாடல்..  ‘  என்ற வானலை குரலைத் தொடர்ந்து  ‘ இதோ இதோ என் பல்லவி.. ‘  என்று பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அதில் ஒரு நீல நிறத்திலான ஆட்டோவிற்குள் அதன் சாரதி பாடலில் மெய்மறந்து ஆட்டோ பின் இருக்கையில் கால்மேல் கால் போட்டபடி படுத்திருந்து, ரசித்துக் கொண்டிருந்தான்.    மதுமிதா பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்து கைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள்.  ‘ தனியா வரலடா அப்பா தான் பஸ் ஏத்திவிட வந்தவர்.. அங்கால கடையில நிக்கிறார்.. ‘  என்றாள் மதுமிதா    ‘………’  ‘ ரெண்டு நாள் ட்ரெயினிங் தானே.. நடிக்காத நீ.. என்னவோ டெய்லி பாத்து...

காதலே நிம்மதி! (கதை)

  அன்று விடுமுறை நாள். ரேணுகா நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். கைபேசி சிணுங்கியது போர்வையை விலக்கி எடுத்துப் பார்த்தாள். அவளுடைய தோழி ரெபேக்கா அழைப்பில் இருந்தாள். அழைப்பை எடுத்து காதில் வைத்து    ‘ ஹலோ ஹப்பி ஈஸ்டர்டி.. ‘  என்றாள் ரேணு.   ‘ தாங்ஸ்டி.. நீ எங்க நிக்க.. ?’  என்றாள் ரெபேக்கா   ‘ வீட்டதான்.. இன்னும் எழும்பலடி.. ஆமா நீ சேர்ச்க்கு போகலயா.. ?’  என ரேணு கேட்க,    ‘ வெளிக்கிட்டன்டி.. அம்மா ஆக்கள் போய்ட்டாங்க.. நேத்து தைக்க குடுத்த சாறிபிளவுஸ் சரியில்லடி.. அந்த லூசு மனிசி ஒழுங்கா தைக்கல.. அத அஜஸ்ட் பண்ணி வெளிக்கிட நேரம்போய்ட்டு.. இப்ப பைக் ஸ்டார்ட் வருதில்ல.. ‘  என்றாள் ரெபேக்கா.   ‘ நேரம் என்னடி.. எட்டு மணி ஆகுதேடி.. ம்ம்ம.. பொறு முகத்த கழுவி உடுப்பு மாத்திட்டு வாறன்.. ‘ என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டு வேகமாக எழும்பி தயாராகி நண்பியை சேர்ச்சுக்கு கொண்டு போய் இறக்கி விட்டு வருவதாக தாயிடம் சொல்லிவிட்டு தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டு கிளம்பினாள் ரேணுகா.   ரேணுகாவின் குடும்பம் ஒரு சாதாரண நடுத்தரவர்க்கம். ...