Skip to main content

Posts

ஈர முத்தம்

   ‘ டேய் மச்சான் இதோட சரிடா.. இனிமேல் அவளோட நான் கதைச்சிட்டா பாரேன்.. ‘  என்றான்ஒருவன்.   ‘ டேய்.. என்னடா நடந்த.. இப்ப மூணு மாசமோ என்னவோ தானோ நீ அவள லவ் பண்ற.. அதுக்குள்ள என்னடா சண்ட.. ‘  என்றான் இன்னொருவன்.   ‘ பொண்ணாடா அவ.. ராட்சசி.. ஒரு கிஸ் பண்ணன்டா.. ஏதோ ரேப் பண்ண மாதிரி ஓவரா பண்றாடா.. ‘ என்றான் கையிலிருந்த பியரை குடித்தபடி.    ‘ டேய் லவ்ல இந்த சண்டெயல்லாம் ஒரு விசயமே இல்ல.. கல்யாணம் முடிச்ச அனுபவசாலி சொல்றன் கேட்டு நடந்துகொள்ளு.. ‘  என்று சொல்லி நக்கலடித்தான் மற்றவன்.    ‘ ஆமா ஆமா நீயும் உன் கலியாணமும்.. டேய்.. மச்… மச்சான்.. ராஜ்.. அடேய்.. பிருத்விராஜ்.. ‘  என்று உளறிக்கொண்டு அந்தபக்கமாக திரும்பி கைபேசியில் ஏதோ பேசிக்கொண்டிருந்த பிருத்விராஜீன் தோளை தட்டினான் பிருத்வியின் நண்பன்.   அன்று ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் மூவரும் சேர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர் அந்த ரெஸ்டோரன்டில். அழைப்பை துண்டித்து விட்டு திரும்பி  ‘ டேய் மனுசனாடா நீங்க.. ஒரு போன் கதைக்க விடாம கத்துறீங்களேடா.. ‘ என்றான் பிருத்வி.   ‘ மச்சான்.. ...

மனோகரி (சிறுகதை)

  சூரியன் மறைந்து இருளத் தொடங்கிவிட்டது. மனோகரி வாசலை எட்டிப் பார்த்தாள். ஏமாற்றத்ததுடன் திரும்பி மிச்சமிருந்த பாத்திரங்களை கழுவத் தொடங்கினாள். மனம் படபடப்பாக இருந்தது. தொண்டையெல்லாம் வறண்டு இருமல் வந்தது. வாளியிலிருந்த தண்ணீரை ஒரு டம்ளரில் அள்ளி குடித்துவிட்டு, மீண்டும் வாசலுக்கு வந்தாள். ஏதோ இனம்புரியாத பயம் மனதை அழுத்தியது. மனோகரியின் இந்த பதட்டத்திற்கு காரணம் மாலை வெளியே விளையாடப்போன அவளுடைய மகள் இரவு ஏழு மணியாகியும் இன்னும் வீட்டுக்கு வரவில்லை. ஒருநாளும் இப்படி தாமதமானதில்லை. மனோகரியின் மகளுக்கு ஏழு வயதாகிறது. பள்ளி முடிந்து வந்து பக்கத்து வீட்டு தன்வயதொத்த பிள்ளைகளுடன் விளையாடச் சென்று விடுவாள். மாலை ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு, எட்டு மணிக்கெல்லாம் தூங்கிவிடுவாள் மனோகரியின் ஒரே மகள் துஸ்யந்தி. இன்று ஏழு மணியாகியும் பிள்ளை வீட்டுக்கு வராமல் இருக்க மனோகரிக்கு பயத்தில் நெஞ்சு படபடக்க தொடங்கியது. பக்கத்து வீட்டு வேலிக்கப்பால் எட்டிப் பார்த்து ‘ராகினிக்கா உன்ர மகன் வீட்ட வந்திட்டானா.. என்ர பெட்ட இன்னும் வீட்ட வரலேயேக்கா..’ என்றாள். ‘அவன் அப்போதே வந்திடானேடி...

இஸ்ரேல் - லெபனான் மோதலால் தஞ்சமடைந்த இலங்கையர்கள்!!

  இஸ்ரேல் - லெபனான் மோதல் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வு பணிப்பாளராக புதியவர்!!

  அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறுமிகள் இருவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

  கொழும்பு செல்லவிருந்த காத்தான்குடி இரு சிறுமிகளை அறையில் அடைத்துவைத்து பஸ் நடத்துனர் மற்றும் சாரதி பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,

குறுஞ்செய்திகள்!!

  1. தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டி!! எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு அனைத்து இடங்களிலும் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

திருமலையில் அட்டகாசம் செய்யும் பிக்கு!!

  திருகோணமலை குச்சவெளி மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள் நிலம் என பிக்கு ஒருவர் கூறி வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.