Saturday 5 October 2024

குறுஞ்செய்திகள்!!

 


1.

தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டி!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு அனைத்து இடங்களிலும் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

2.

ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளைச் சந்திக்கவில்லை!!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளைச் சந்திக்காமலே பயணத்தை நிறைவு செய்துள்ளார். 

3.

ஜனாதிபதிக்கு வந்த அழைப்பு!! 

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை இந்தியாவுக்கு வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அழைப்பு விடுத்துள்ளார்.

4.

50 இந்திய மீனவர்கள் விடுதலை!! 

எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்த 50 இந்திய மீனவர்களை 10 ஆண்டுகள் ஒத்திவைத்த சிறைத்தண்டனையுடன் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 


5.

நியமனம் ஒன்றை இரத்து செய்தார் ஜனாதிபதி அனுர!! 

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய நியமனம் ஒன்றை இரத்துச் செய்து ஜனாதிபதி அநுரகுமார உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

இஸ்ரேல் - லெபனான் மோதலால் தஞ்சமடைந்த இலங்கையர்கள்!!

  இஸ்ரேல் - லெபனான் மோதல் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு...