Friday 4 October 2024

பிள்ளைகளுடன் மரத்தில் வாழும் குடும்பம்!

 


அநுராதபுரம், மஹாவிலாச்சிய பகுதியில் இளம் குடும்பம் ஒன்று யானைகளுக்கு அஞ்சி மரத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வீட்டில் கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் வாழ்ந்து வருகின்றனர்.இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் தெரிவிக்கையில்,

போதுமான வாழ்வாதாரம் இல்லாத காரணத்தினால் நிரந்தர வீடு ஒன்றைக் கட்ட முடியாமல் மரத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். பணம் இல்லாத காரணத்தினால் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

வீட்டில் நானும் எனது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றோம். எனது மூத்த மகள் 18 வயதுடையவர், இளைய மகன் 5 வயதுடையவர் ஆவார்.

மூத்த மகள் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றாள். நான் கூலி வேலை செய்து எனது குடும்பத்தை நடத்தி வருகிறேன். நாங்கள் இதற்கு முன்னர் இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள எமது உறவினர்களுடன் ஒன்றாக வசித்து வந்தோம். பின்னர் உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மஹாவிலாச்சிய பகுதிக்கு சென்றோம்.

இங்கு நபரொருவர் எங்கள் மீது இரக்கப்பட்டு காணி ஒன்றை வழங்கியபோதும், அந்த காணி விவசாய நடவடிக்கைகளுக்கு சொந்தமானது என தெரிவித்து பிரதேச மக்கள் தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர், மஹாவிலாச்சிய பிரதேச செயலாளரின் தலையீட்டில் அந்த காணி உத்தியோகபூர்வமாக எங்களுக்கு வழங்கப்பட்டது. இதனியடுத்து காணியில் அறை ஒன்றை கட்டுவதற்கு அத்திவாரம் இட்டோம்.

ஆனால் போதுமான பணம் இல்லாத காரணத்தினால் அறை கட்டும் பணி இடைநிறுத்தப்பட்டது. அதன் பின்னர், யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக இந்த மரத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றோம் என கூறிய அவர், தாங்கள் வசிப்பதற்கு வீடு அமைக்க உதவி புரியுமாரும் கோரிக்கை விடுத்துள்ளார்.    

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


No comments:

Post a Comment

இஸ்ரேல் - லெபனான் மோதலால் தஞ்சமடைந்த இலங்கையர்கள்!!

  இஸ்ரேல் - லெபனான் மோதல் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு...