Friday 4 October 2024

யாழில் கட்டுப்பணம் செலுத்திய 8 சுயேட்சைக் குழுக்கள்!

 




யாழ். தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (03-10-2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை (04-10-2024) ஆரம்பமாகவுள்ளன.

இதற்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

No comments:

Post a Comment

இஸ்ரேல் - லெபனான் மோதலால் தஞ்சமடைந்த இலங்கையர்கள்!!

  இஸ்ரேல் - லெபனான் மோதல் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு...