Friday 4 October 2024

யாழில் ஒரு கோடி வழிப்பறி!!

 


யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தமிழர் ஒருவரிடம், ஒரு கோடி ரூபாய் பணம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் காணி தரகரின் வழிநடத்தலில் இடம்பெற்றமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் யாழ்ப்பாணம் , சங்குவேலி பகுதியை சேர்ந்த புலம்பெயர் தமிழர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

அவர் கடந்த புதன்கிழமை (2) சேந்தான்குளம் பகுதியில் உள்ள தனது காணியை விற்ற பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை, மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்தொடர்ந்து வந்த இருவர் அவரை வீதியில் வழிமறித்து அவரை தாக்கி விட்டு பணம் , கடவுச்சீட்டு , இலட்ச ரூபாய்க்கள் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து, சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் நிலையில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளது, காணியை விற்றவர் , காணியை வாங்கியவர் ஆகியோர், சட்டத்தரணி முன்பாக உறுதி எழுதிய பின்னர் பணத்தினை கைமாற்றிக்கொண்ட போது , அவர்களுடன் காணி விற்பனை தரகரும் இருந்துள்ளார்.

காணியை விற்றவர் , பணத்துடன் வீடு திரும்பும் போது, அவரிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டமையால் , அவர் பணத்துடன் செல்லும் விடயம் தெரிந்தவர்களின் தகவலின் அடிப்படையில் தான் கொள்ளை நடந்துள்ளதாக சந்தேகித்த பொலிஸார் , தரகர் மீது சந்தேகம் கொண்டு அவரை விசாரணை வலயத்திற்குள் கொண்டு வந்தனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

No comments:

Post a Comment

இஸ்ரேல் - லெபனான் மோதலால் தஞ்சமடைந்த இலங்கையர்கள்!!

  இஸ்ரேல் - லெபனான் மோதல் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு...