Thursday 3 October 2024

தமிழுக்கு கிடைத்த பெருமை!!

 


சுவிற்சர்லாந்தில் உள்ள Coop என்ற வியாபார நிறுவனம் வாராந்தம் வெளியிடும் Coopzeitung என்ற இந்த வார பத்திரிகையில் 95 ஆம் பக்கத்தில் வெளிவந்த ஒரு பதிவு , இலங்கைத் தமிழர்கள் பெருமைப்படுவதாக அமைந்துள்ளது.

வாராந்தம் இந்த பகுதியில் யாராவது ஒரு கேள்வி கேட்பார்கள் அதற்கு பத்திரிகை ஆசிரியர் பதில் அளிப்பார், அதன்படி இந்த வாரம் உலகத்தில் பழமையான மொழி எது என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு அவர்கள் அளித்த பதிலில், உலகில் மிகவும் பழமையான, இன்றும் பேசப்படுகின்ற மொழி என்று முதலாவதாக தமிழைத்தான் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

தமிழ், சீனம், அரபு, பேர்சி மற்றும் அரமேயம் ஆகிய மொழிகளை மிகவும் பழமையான மொழிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உலகப் படத்தில் தமிழ் பேசும் இடம் என்று நேரடியாக இலங்கையை தான் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் இங்கே ஐரோப்பாவில் இருந்து ஜேர்மன் மொழியில் வெளி வருகின்ற பத்திரிகையில் மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


No comments:

Post a Comment

இஸ்ரேல் - லெபனான் மோதலால் தஞ்சமடைந்த இலங்கையர்கள்!!

  இஸ்ரேல் - லெபனான் மோதல் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு...