Skip to main content

இன்று நவராத்திரி விழா ஆரம்பம்!

 


கல்வி,  செல்வம்,  வீரம் என்பவற்றினைத்  தரக்கூட்டிய துர்க்கை, இலங்கும், சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளை போற்றி கொண்டாடும் வழிபாடே நவராத்திரி விழாவாகும்.

இந்துக்களால் கொண்டாட்டப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் நவராத்தியும் ஒன்றாகும். அந்தவகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா இன்று ( 3) துவங்கி, அக்டோபர் 11ம் திகதி வரை கொண்டாடப்பட உள்ளது.

நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையின் எந்த வடிவத்தை நாம் வழிபட வேண்டும், நவராத்திரி வழிபாடு தோன்றிய முறை, கொலு வைக்கும் முறை தோன்றிய வரலாறு, முதல் நாளில் அம்பிகையை எந்த நிறத்தில், என்ன நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதற்குரிய முறைகளில் வழிபடுவது சிறப்பு.

நவராத்திரியை கொண்டாடுவதற்கும், கொலு வைப்பதற்கும் புராண கதைகள் உள்ளன.

மகிஷன் என்ற எறுமை ரூபம் கொண்ட அசுரனை வதம் செய்வதற்காக அம்பிகை, ஒன்பது நாட்கள் தவம் இருந்தாள். 

பல்வேறு சக்தி வாய்ந்த வரங்களை பெற்ற அந்த அசுரனை வதம் செய்வதற்காக அம்பிகைக்கு ஒவ்வொரு தெய்வங்களும் ஒவ்வொரு விதமான ஆயுதங்களை அளிக்கிறார்கள்.

கடைசியாக அசுரனுடன் அம்பிகையை போரிட்டு, அவனை வதம் செய்கிறாள். அவள் வெற்றிக் கொண்ட பத்தாவது நாளையே விஜயதசமியாக கொண்டாடுகிறோம்.

அன்றையதினம் குழந்தைகளுக்கு ஏடு தொடக்குதல், புதிய தொலில் ஆரம்பித்தல் போன சுகாரியங்களை தொடங்கும் வழக்கமும் தொன்று தொட்டு இந்துக்களிடம் காணப்படுகின்றது.

விஜதசமி அன்று தொடங்கும் காரியங்கள் மிகவும் நன்மை அளிக்கும் என்பது இந்து மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

Comments

Popular posts from this blog

தம்மிக்க அரசியலில் இருந்து ஓய்வு!!

  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருகிறார்.

இஸ்ரேல் - லெபனான் மோதலால் தஞ்சமடைந்த இலங்கையர்கள்!!

  இஸ்ரேல் - லெபனான் மோதல் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸில் பெருவெடிப்பு! காணாமல் போன பெண் ஆசிரியை?

  பாரிஸ்   ஐந்தாவது   நிர்வாக   பிரிவில்   பரிஸ்   அமெரிக்கன்   அக்கடமி   கட்டிடத்தில்   நிகழ்ந்த   பெரும்   வெடிப்பு சம்பவத்தில்   பெண்ணொருவர்   காணாமல்   போயுள்ளதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது .50  வயதான   தையல் ஆசிரியரான   இவர்   வெடிப்பு   சம்பவம்   இடம்பெற்ற   போது   மூன்றாவது   தளத்தில்   நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனால்   சேதமடைந்த   இடிபாடுகளிடையே   இவர்   சிக்கி   உயிரிழந்து   இருக்கலாம்   என அஞ்சப்படுகின்றது . சம்பவம்   நிகழ்நத   இடத்தில்   இடிபாடுகளை   அகற்றும்   பணிகள்   அயல்   கட்டிடங்களும் சேதமடையலாம்   என்ற   நிலையை   கருத்தில்   கொண்டு   தற்காலிகமாக   இடைநிறுத்தப்பட்டுள்ளது . பெரும்   தீ , கட்டிட   சேதங்களை   ஏற்படுத்திய   அந்த   வெடிப்பு   சம்பவத்தின்   காரணம்   இன்னும்   தெரியவில்லை எனவும்   எரிவ...