Skip to main content

ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!!

 


இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர மீதான ஆதரவு அலை கொஞ்சம் குறையத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக அவர் பதவி ஏற்ற பின் முன்னை அரசின் ஊழல்கள் பற்றி பல செய்திகள் வெளிவந்து மக்களை உசுப்பேத்தினாலும் , ஊழல் பற்றிய ரிப்போர்ட் வெளிவருவது மட்டுமே நடக்கிறது , ஆனால் அது மீது எந்த நடவடிக்கையும் எடுபடவில்லை என்பது மக்களை அநுர மீதும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வைத்துள்ளது.

குறிப்பாக அநுர அரசும் , அவரது கட்சியும் பார் லைசன்ஸ் விடயத்தில் அவசரப்பட்டு அறிக்கை விட்டு மூக்கை உடைத்துள்ளனர். மதுபானகடை  லைசன்ஸ் விடயம் உண்மை என்றாலும், எந்த அரசியல் வாதியும் ஆதாரங்களை தங்கள் பெயரில் விட்டு வைக்காமல் வேறு ஒருவரின் பெயரில் உரிய ஆவணங்களை கொடுத்தே பார் லைசன்ஸ் பெற்றதால், அநுர கட்சி நினைப்பது போல எதுவும் செய்ய முடியாத நிலை.

விளக்கம் குறைவான ஒரு சிலரே சொந்த பெயரில் கடிதம் கொடுத்து மாட்டிக் கொண்டனர். அதுவும் வெறும் ரெக்மென்டேஷன் கடிதம். அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

அது தவிர அநுரவின் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்ற அவருக்கு அறுதிப்பெரும்பான்மை பாராளுமன்றில் தேவை. அவர் நினைத்தபடி எம்பி மற்றும் , அரச ஊழியர்களின் வரப்பிரசாதங்களை குறைக்க முடியாது .
பாராளு மன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது போனால், அவருடைய எந்தவொரு தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாமல் போகும். அவர் வெற்றி பெற்றபின் பெருகிய ஆதரவு அலையில் அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டாயம் கிடைக்கும் என்ற நிலை தென்பகுதியில் ஏற்பட்டது.


ஆனால் , ஊடகங்கள் எல்லாம் கொஞ்சம் ஓவராக பில்டப் கொடுத்து , பின்பு எதுவும் நடக்காமல் போக , ஆதரவு அலை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளதாக தென்பகுதி செய்திகள் சொல்கின்றன.

அதுதான் அவசரமாக நேற்று ஊழலுக்கு எதிரான சில கைதுகள் நடைபெற்றன. அவை வெறுமனே அலுவலகத்தில் ஒரு லட்சம் , இரண்டு லட்சம் லஞ்சம் பெற்றவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வுகள். அந்த செய்திகள் அரசு நினைத்தது போல பெரிய வைரலாகவில்லை.

இப்போதைய நிலையில் அநுர பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டுமானால் , அவர் தேர்தல் பிரச்சாரத்தில் சொன்ன மிகப்பெரிய கைதுகள் , விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். இல்லாது போனால் , அவர் பிள்ளையானுக்கும், டக்ளசுக்கும் அமைச்சு பதவி கொடுத்துதான் ஆட்சி நடத்த வேண்டிய நிலை வரலாம்.


Comments

Popular posts from this blog

பிரான்ஸ்: கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து! 17 பேர் படுகாயம்!!

  தெற்கு பிரான்சின் லோட் (Lot) மாவட்டத்தில் உள்ள கஹோர்ஸ் (Cahors) நகரில், நிகழ்ந்த பயங்கர விபத்து ஒன்றில் 17 பாடசாலை மாணவர்கள்  படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை செப்டம்பர் 15 2025  காலை 07.20 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பாடசாலை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.  விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, செமின் டெஸ் டுராண்ட்ஸ் (Chemin des Durands) பகுதியில், லெஸ் ஜூனீஸ் (Les Junies) என்ற ஊரிலிருந்து கஹோர்ஸ் (Cahors) நகர மையத்திற்கு சென்று கொண்டிருந்த எவிடென்ஸ் (Évidence) நிறுவனத்தின் 16 எண் பேருந்து (Bus line 16) திடீரென கட்டுப்பாட்டை இழந்து வழி மாறி மரம்(Arbre) ஒன்றில் மோதியது.  வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதி உயர் வேகத்தில் மரத்தில் மோதியதால் பேருந்து திரும்பி விழுந்துள்ளது. அதில்  38 மாணவர்கள் (Collégiens et Lycéens), ஆசிரியர் ஒருவர், மற்றும் பேருந்து சாரதி ஒருவர் என மொத்தமாக 40 பேர் பயணித்தனர். அவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து விபத்து நிகழ்ந்த பிராந்தியத்தின் ஆளுநர் கிளேரா ரௌலின் (Claire Raul...

பிரான்ஸ்: ஈரோ மில்லியன் விளையாட்டு! மீண்டும் ஒரு மில்லியன் ஈரோ வென்ற நபர்!!

  ஐரோப்பிய யூனியன் (European Union) நாடுகளான பிரான்ஸ் (France), ஸ்பெயின் (Spain), போர்த்துக்கல்(Portugal) மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் விளையாடப்படும் சர்வதேச சீட்டிழுப்பு (International Lottery) விளையாட்டின், கடந்தவார சீட்டிழுப்பில் பிரான்ஸ் குடியுரிமை கொண்ட  நபர் ஒருவர் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றுள்ளார்.  இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் இதே நபர் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த யூரோமில்லியன் (EuroMillions) விளையாட்டிலும் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றிருந்தார். இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு முறை பரிசை வென்றுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தியுள்ளது.  பிரான்ஸின் அதிகாரப்பூர்வ சீட்டிழுப்பு நிறுவனமான ஃப்ரான்செஸ் டெஸ் ஜியூ (Française des Jeux - FDJ) இவரது இந்த வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் லொட்டரி உலகிலும் இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த பரிசுத்தொகையானது யூரோமில்லியன் (EuroMillions) இன், மை மில்லியன் (My Million) என்ற சிறப்பு பிரெஞ்ச் டிரா (French Draw) மூலம் கிடைத்து...

பாரிஸ்: பிரபல விடுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! சுற்றுலா பயணிகள் எச்சரிக்கை!

  பரிஸ் (Paris), செப்டம்பர் 22, 2025  உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தளமான பாரிஸ்(Paris) நகரின் லியோன் (Gare de Lyon) ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள 12வது வட்டாரத்தில் (12th Arrondissement) உள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்றில் 19 வயது யுவதிக்கு பாலியல் ரீதியில் அநீதி இழைக்கப்பட்டுள்ளமை பாரிஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  பாரிஸ் நகரின் 12ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள மிகப்பிரபலான ரூஃப்டாப் மதுபான விடுதி (Rooftop Bar)-யின் அடித்தளத்தில் (Basement) இந்த பயங்கர சம்பவம் நிகந்துள்ளது. சம்பவ தினமான  20 செப்டம்பர் 2025 சனிக்கிழமையன்று அதிகாலை நான்கு மணியளவில் சம்பவம் இடம்பெற்ற குறித்த விடுதியில் இருந்து காவல்துறையினருக்கு பாலியல் அத்துமீறல் தொடர்பில் புகாரளிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த பெண்ணை மீட்டு பாதுகாப்பளித்தனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து பாதிக்கப்பட்ட பெண் மதுபான விடுதி ஊழியர் (Bar Employee) ஒருவரால் ஏமாற்றப்பட்டு அடித்தளத்தில் (Basement)இ...