Skip to main content

பிரான்சில் பிறந்த குழந்தைகளுக்கு இலவச சேவை!!



பிரான்சில் நாளைய தினம் (செப்டம்பர் 1 2025) முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசமாக அறிய வகையிலான நோய் நிலைமைகளை கண்டறியும் பல பரிசோதனைகளை உள்ளடக்கிய  Neonatal Screening திட்டம் நடைமுறைக்கு வருகிறது. 

இதன் மூலம் Rare Genetic Diseases-ஐ கண்டறிய புதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். ஒரு குழந்தை பிறந்து 2-3 நாட்களுக்குள் இந்த சேவை இலவசமாக வழங்கப்படும் இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு சிறந்ததொரு முயற்சியாக உள்ளது.

இதன் மூலம் Sickle Cell Disease (SCD) க்கான Universal Screening அறிமுகப்படுத்தப்படுவதுடன், Perigenomed Project மூலம் Genome Sequencing-ஐ பயன்படுத்தி பரிசோதனை செய்யும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டம் பிரான்சின் பொது சுகாதார இலக்குகளுடன் இணைந்து, Sickle Cell Disease மற்றும் பிற மரபணு சார்ந்த நோய்நிலைமைகளை கண்டறியும் வகையிலான கடினமான பரிசோதனைகளையும் முன்னெடுக்கிறது. 

Sickle Cell Disease (SCD) பிரான்சில், குறிப்பாக ஆப்பிரிக்க, கரீபியன், மற்றும் மத்திய கிழக்கு புலம்பெயர் சமூகங்களில் கண்டறியப்படும் முக்கியமான நோய் நிலைமையாக உள்ளது. இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் Neonatal Screening உதவியோடு நோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்படுவதன்  (Early Diagnosis) மூலம் குழந்தைகளின் இறப்பு விகிதங்களை (Mortality Rates) கணிசமாகக் குறைக்க முடியும். 

இந்த முறையில் பிரான்சில் உள்ள அனைத்து புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் உள்ளடக்கி, Cord Blood அல்லது Heel Prick Samples ஐப் பயன்படுத்தி HPLC (High-Performance Liquid Chromatography) மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. 

செப்டம்பர் 1, 2025 முதல் தொடங்கும் இந்த Neonatal Screening செயற்திட்டம், பிரான்சில் SCD மற்றும் பிற மரபணு நோய்களை கட்டுப்படுத்துவதற்கு ஒரு முக்கிய படியாகும். அரசின் இந்த முயற்சி, பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. செயற்திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பிரெஞ்சு அரசு சுகாதார இணையதளங்களைப் பார்வையிடவும். 



Comments

Popular posts from this blog

பிரான்ஸ்: கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து! 17 பேர் படுகாயம்!!

  தெற்கு பிரான்சின் லோட் (Lot) மாவட்டத்தில் உள்ள கஹோர்ஸ் (Cahors) நகரில், நிகழ்ந்த பயங்கர விபத்து ஒன்றில் 17 பாடசாலை மாணவர்கள்  படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை செப்டம்பர் 15 2025  காலை 07.20 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பாடசாலை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.  விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, செமின் டெஸ் டுராண்ட்ஸ் (Chemin des Durands) பகுதியில், லெஸ் ஜூனீஸ் (Les Junies) என்ற ஊரிலிருந்து கஹோர்ஸ் (Cahors) நகர மையத்திற்கு சென்று கொண்டிருந்த எவிடென்ஸ் (Évidence) நிறுவனத்தின் 16 எண் பேருந்து (Bus line 16) திடீரென கட்டுப்பாட்டை இழந்து வழி மாறி மரம்(Arbre) ஒன்றில் மோதியது.  வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதி உயர் வேகத்தில் மரத்தில் மோதியதால் பேருந்து திரும்பி விழுந்துள்ளது. அதில்  38 மாணவர்கள் (Collégiens et Lycéens), ஆசிரியர் ஒருவர், மற்றும் பேருந்து சாரதி ஒருவர் என மொத்தமாக 40 பேர் பயணித்தனர். அவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து விபத்து நிகழ்ந்த பிராந்தியத்தின் ஆளுநர் கிளேரா ரௌலின் (Claire Raul...

பிரான்ஸ்: ஈரோ மில்லியன் விளையாட்டு! மீண்டும் ஒரு மில்லியன் ஈரோ வென்ற நபர்!!

  ஐரோப்பிய யூனியன் (European Union) நாடுகளான பிரான்ஸ் (France), ஸ்பெயின் (Spain), போர்த்துக்கல்(Portugal) மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் விளையாடப்படும் சர்வதேச சீட்டிழுப்பு (International Lottery) விளையாட்டின், கடந்தவார சீட்டிழுப்பில் பிரான்ஸ் குடியுரிமை கொண்ட  நபர் ஒருவர் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றுள்ளார்.  இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் இதே நபர் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த யூரோமில்லியன் (EuroMillions) விளையாட்டிலும் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றிருந்தார். இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு முறை பரிசை வென்றுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தியுள்ளது.  பிரான்ஸின் அதிகாரப்பூர்வ சீட்டிழுப்பு நிறுவனமான ஃப்ரான்செஸ் டெஸ் ஜியூ (Française des Jeux - FDJ) இவரது இந்த வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் லொட்டரி உலகிலும் இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த பரிசுத்தொகையானது யூரோமில்லியன் (EuroMillions) இன், மை மில்லியன் (My Million) என்ற சிறப்பு பிரெஞ்ச் டிரா (French Draw) மூலம் கிடைத்து...

பிரான்ஸ்: உணவகத்தில் ஏற்பட்ட விபத்து! காயங்களுடன் தப்பிய வாடிக்கையாளர்கள்!!

  பிரான்சின் Juvisy-sur-Orge (Essonne) நகரில் செப்டம்பர் 13, 2025 சனிக்கிழமையன்று நண்பகல் காரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து Gare de Juvisy-sur-Orge (Juvisy-sur-Orge ரயில் நிலையம்) அருகிலுள்ள fast-food உணவகத்தின் (restaurant fast-food) கண்ணாடி வாசலை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.  சம்பவம் குறித்து தெரியவருவதாவது, காரின் சாரதியான 95  வயது முதியவருக்கு காரை செலுத்திக் கொண்டிருக்கும் பொழுது திடீரென மயக்க நிலை ஏற்பட்டதால் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்குள் பாய்ந்துள்ளது.  விபத்தின் போது உணவகத்திற்குள் இருந்த வாடிக்கையாளர்களை சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன இருப்பினும் எவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாக்கவில்லை என காவல்துறை  (police Juvisy-sur-Orge) தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.  Juvisy-sur-Orge ரயில் நிலையம் (Gare de Juvisy-sur-Orge), பாரிஸ் (Paris) நகருக்கு அருகிலுள்ள , இந்த நகரத்தின் மிகவும் நெரிசல் நிறைந்த இடங்களில் ஒன்று. தினசரி கிட்டத்தட்ட 90,000 பயணிகள் (voyageurs RER) RER D மற்றும் RER B ரயில்கள் மூலம் பயணம் செய்...