Skip to main content

பிரான்சில் துயரச் சம்பவம்! படுகொலை செய்யப்பட்ட ஆண்!!

 


நேற்று ஞாயிற்றுக் கிழமை (14 செப்டம்பர் 2025) இரவு 12.30 மணியளவில் பிரான்சின் Fontenay-sous-Bois (Val-de-Marne) நகரில் கொடூரமான படுகொலை சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 40 வயதுடைய ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார். இது பிரான்ஸ் (France) இல் கத்திக்குத்து (couteau attaques)  தாக்குதல்களின் அதிகரிப்பை (hausse des violences) பிரதிபலிக்கிறது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினத்தன்று நள்ளிரவு 12:30 மணி அளவில் Allée du Buisson-de-la-Bergère (அல்லீ டு புய்சோன் டி லா பெர்ஜெர்) பகுதி அருகே, rue Jean-Zay (ரியூ ஜான்-ஜே) மற்றும் avenue Charles-Garcia (அவென்யூ சார்ல்ஸ்-கார்ஸியா) இடுக்கில் மரணித்த 40 வயது ஆண் நின்றிருந்தார். 

அந்த நேரம் கத்தியுடன் அங்கு வந்த இரண்டு இளைஞர்கள்(deux agresseurs) அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். உடலின் பல இடங்களில் ஆழமான காயங்கள் ஏற்படும் வரை தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர், இவ்வாறு அவரது கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட ஆழமான காயம் சம்பவ இடத்திலேயே அவரது உயிரைப் பறித்தது. 

அங்கு இடம்பெற்ற அனைத்து சம்பவத்தையும் நேரில் கண்ட ஒரு சாட்சி (témoin) அவற்றை வீடியோவாக (vidéo filmée) பதிவு செய்துள்ளார், இந்த வீடியோ ஆதாரம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க(enquête) உதவும் என SDPJ 94 (Service Départemental de Police Judiciaire du Val-de-Marne) போலீஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. 

அடுத்தகட்ட விசாரணைகளில் இருந்து கொலை செய்யப்பட்டவர் அந்த பகுதியில்தான் வசிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற கொலையாளிகளில் ஒருவர், கொலை செய்யப்பட்டவரின் சிறை(Jail) நண்பர்(ancien codétenu) என்பதும் தெரிய வந்துள்ளது. 

குறித்த நபர் இன்றைய தினம்  திங்கட்  கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரது நண்பரான தப்பியோடிய மற்றுமொரு கொலையாளி தேடப்பட்டு வருகிறார். கொலை நடந்த இடத்தில் அதிக இரத்தம்  (plein de sang) இருந்தமை  உள்ளூர் மக்களை அச்சமடைய செய்துள்ளது. 

இந்த ஈவிரக்கமற்ற படுகொலை (meurtre sauvage) குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது. கத்திக்குத்துக்கான காரணங்கள் (motifs de l'attaque) இன்னும் தெரியவில்லை, ஆனால் இது பிரான்ஸ் நாட்டில் அதிகரிக்கும் கத்தி வன்முறை (augmentation des attaques au couteau) போக்கை (tendance) சுட்டிக்காட்டுகிறது. 

இந்த சம்பவம் Val-de-Marne (வால்-டி-மார்ன்) பகுதியில் பாதுகாப்பு (sécurité publique) குறித்த கேள்விகளை (inquiétudes des riverains) அதிகரித்துள்ளது, 2025இன் முதல் அரை ஆண்டில் 16% அதிகரித்துள்ளது. இவ்வாறான வன்முறையை (violence extrême) எதிர்த்து பாதுகாப்பு நடவடிக்கைகளை (mesures de sécurité) முன்னெடுக்குமாறு உள்ளூர் மக்கள் (riverains de Fontenay-sous-Bois) கோருகின்றனர்.

Comments

Popular posts from this blog

பிரான்ஸ்: கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து! 17 பேர் படுகாயம்!!

  தெற்கு பிரான்சின் லோட் (Lot) மாவட்டத்தில் உள்ள கஹோர்ஸ் (Cahors) நகரில், நிகழ்ந்த பயங்கர விபத்து ஒன்றில் 17 பாடசாலை மாணவர்கள்  படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை செப்டம்பர் 15 2025  காலை 07.20 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பாடசாலை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.  விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, செமின் டெஸ் டுராண்ட்ஸ் (Chemin des Durands) பகுதியில், லெஸ் ஜூனீஸ் (Les Junies) என்ற ஊரிலிருந்து கஹோர்ஸ் (Cahors) நகர மையத்திற்கு சென்று கொண்டிருந்த எவிடென்ஸ் (Évidence) நிறுவனத்தின் 16 எண் பேருந்து (Bus line 16) திடீரென கட்டுப்பாட்டை இழந்து வழி மாறி மரம்(Arbre) ஒன்றில் மோதியது.  வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதி உயர் வேகத்தில் மரத்தில் மோதியதால் பேருந்து திரும்பி விழுந்துள்ளது. அதில்  38 மாணவர்கள் (Collégiens et Lycéens), ஆசிரியர் ஒருவர், மற்றும் பேருந்து சாரதி ஒருவர் என மொத்தமாக 40 பேர் பயணித்தனர். அவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து விபத்து நிகழ்ந்த பிராந்தியத்தின் ஆளுநர் கிளேரா ரௌலின் (Claire Raul...

பிரான்ஸ்: ஈரோ மில்லியன் விளையாட்டு! மீண்டும் ஒரு மில்லியன் ஈரோ வென்ற நபர்!!

  ஐரோப்பிய யூனியன் (European Union) நாடுகளான பிரான்ஸ் (France), ஸ்பெயின் (Spain), போர்த்துக்கல்(Portugal) மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் விளையாடப்படும் சர்வதேச சீட்டிழுப்பு (International Lottery) விளையாட்டின், கடந்தவார சீட்டிழுப்பில் பிரான்ஸ் குடியுரிமை கொண்ட  நபர் ஒருவர் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றுள்ளார்.  இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் இதே நபர் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த யூரோமில்லியன் (EuroMillions) விளையாட்டிலும் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றிருந்தார். இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு முறை பரிசை வென்றுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தியுள்ளது.  பிரான்ஸின் அதிகாரப்பூர்வ சீட்டிழுப்பு நிறுவனமான ஃப்ரான்செஸ் டெஸ் ஜியூ (Française des Jeux - FDJ) இவரது இந்த வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் லொட்டரி உலகிலும் இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த பரிசுத்தொகையானது யூரோமில்லியன் (EuroMillions) இன், மை மில்லியன் (My Million) என்ற சிறப்பு பிரெஞ்ச் டிரா (French Draw) மூலம் கிடைத்து...

பாரிஸ்: பிரபல விடுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! சுற்றுலா பயணிகள் எச்சரிக்கை!

  பரிஸ் (Paris), செப்டம்பர் 22, 2025  உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தளமான பாரிஸ்(Paris) நகரின் லியோன் (Gare de Lyon) ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள 12வது வட்டாரத்தில் (12th Arrondissement) உள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்றில் 19 வயது யுவதிக்கு பாலியல் ரீதியில் அநீதி இழைக்கப்பட்டுள்ளமை பாரிஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  பாரிஸ் நகரின் 12ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள மிகப்பிரபலான ரூஃப்டாப் மதுபான விடுதி (Rooftop Bar)-யின் அடித்தளத்தில் (Basement) இந்த பயங்கர சம்பவம் நிகந்துள்ளது. சம்பவ தினமான  20 செப்டம்பர் 2025 சனிக்கிழமையன்று அதிகாலை நான்கு மணியளவில் சம்பவம் இடம்பெற்ற குறித்த விடுதியில் இருந்து காவல்துறையினருக்கு பாலியல் அத்துமீறல் தொடர்பில் புகாரளிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த பெண்ணை மீட்டு பாதுகாப்பளித்தனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து பாதிக்கப்பட்ட பெண் மதுபான விடுதி ஊழியர் (Bar Employee) ஒருவரால் ஏமாற்றப்பட்டு அடித்தளத்தில் (Basement)இ...