Skip to main content

பாரிஸ் நகரில் தாக்குதல் சம்பவம்! பாதகிக்கப்பட்டவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்!




பிரான்சின் தலைநகரான பாரிஸில் நேற்றைய தினம் வியாழக் கிழமை இரவு மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த (Seriously Injured) 57 வயதுடைய ஆன் ஒருவர் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலாளி தலைமறைவாகியுள்ளார்(Absconding). சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதானது; குறித்த சம்பவமானது பாரிஸ் நகரின் 7 ஆம் வட்டாரத்திலுள்ள (7th Arrondissement) பிளேஸ் டி பிரெட்டுயில் (Place de Breteuil) பகுதியில் 11 செம்டம்பர் 2025 வியாழக்கிழமை இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

தாக்குதலாளி கத்தியைப் பயன்படுத்தி தாக்குதலை (Knife Attack) மேற்கொண்ட நிலையிலேயே குறித்த 57 வயது நபர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார், இதனைத் தொடர்ந்து அவ்விடத்திலிருந்த மக்கள் துரிதமாகச் செயற்பட்டு அவசர சேவைப் பிரிவிற்கு(Emergency Services) அழைப்பினை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவருக்கு உரிய நேரத்தில் முதலுதவி(First Aid) வழங்கி வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். 

ஆனால் துரதிஷ்டவசமாக பொலிஸார் சம்பவ இடத்தை வந்தடையும் முன்னரே குற்றவாளி தப்பி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தாக்கப்பட்டவர் வைத்தியசாலையில்(Hospital) அதி தீவிர சிகிச்சைப் பிரிவில்(Intensive Care) சிகிச்சை பெற்று வரும் நிலையில் குற்றவாளியைக் கைது செய்ய பொலிஸ் தரப்பில் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் "குற்றவாளி(Culprit)யை விரைவில் கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன," என பரிஸ் காவல்துறை (Paris Police Department) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் பரிஸ் (Paris) நகரில் பொதுமக்கள் பாதுகாப்பு(Public Safety) குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த சில மாதங்களாக பரிஸின் பல்வேறு வட்டாரங்களில் (Arrondissements) கத்திக்குத்து தாக்குதல்கள் (Knife Attacks) அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

உதாரணமாக, ஓகஸ்ட் 14, 2025 அன்று பரிஸ் நகரின் 18 ஆம் வட்டாரத்தில் (18th Arrondissement) உள்ள பவுல்வார்ட் டி லா சாபெல் (Boulevard de la Chapelle) பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் (Fatal Attack). இதேபோல், ஓகஸ்ட் 20 அன்று பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் (17th Arrondissement) காவல்துறை வீரர்கள் மீது (Police Officers) நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவங்கள் தனிநபர் பகையினால் (Isolated Incident) நிகழ்ந்தவையா அல்லது தீவிரவாத தாக்குதல்களை (Terrorist Attack)  போன்ற சந்தேகங்கள் தொடர்பில் பொலிஸார் தரப்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.  ஆனால் இவ்வாறான அசம்பாவிதங்களை தடுக்க கண்காணிப்பு கமராக்கள் (CCTV Surveillance) மற்றும் மேலதிக காவல்துறை ரோந்து (Police Patrols) மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை (Security Measures) தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதனடிப்பட்டடையில்  ஏற்கனவே பிளேஸ் டி பிரெட்டுயில் (Place de Breteuil) பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்கள் (Surveillance Cameras) மூலம் குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பரிஸ் (Paris) நகரில் வசிப்பவர்கள் மற்றும் பாரிஸுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் (Tourists) பொது இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை (Police) அறிவுறுத்தியுள்ளது. ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் அல்லது நடவடிக்கைகளை கண்டால் உடனடியாக அவசர எண்ணான 112 (Emergency Number) அல்லது 17 மூலம் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

பிரான்ஸ்: கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து! 17 பேர் படுகாயம்!!

  தெற்கு பிரான்சின் லோட் (Lot) மாவட்டத்தில் உள்ள கஹோர்ஸ் (Cahors) நகரில், நிகழ்ந்த பயங்கர விபத்து ஒன்றில் 17 பாடசாலை மாணவர்கள்  படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை செப்டம்பர் 15 2025  காலை 07.20 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பாடசாலை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.  விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, செமின் டெஸ் டுராண்ட்ஸ் (Chemin des Durands) பகுதியில், லெஸ் ஜூனீஸ் (Les Junies) என்ற ஊரிலிருந்து கஹோர்ஸ் (Cahors) நகர மையத்திற்கு சென்று கொண்டிருந்த எவிடென்ஸ் (Évidence) நிறுவனத்தின் 16 எண் பேருந்து (Bus line 16) திடீரென கட்டுப்பாட்டை இழந்து வழி மாறி மரம்(Arbre) ஒன்றில் மோதியது.  வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதி உயர் வேகத்தில் மரத்தில் மோதியதால் பேருந்து திரும்பி விழுந்துள்ளது. அதில்  38 மாணவர்கள் (Collégiens et Lycéens), ஆசிரியர் ஒருவர், மற்றும் பேருந்து சாரதி ஒருவர் என மொத்தமாக 40 பேர் பயணித்தனர். அவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து விபத்து நிகழ்ந்த பிராந்தியத்தின் ஆளுநர் கிளேரா ரௌலின் (Claire Raul...

பிரான்ஸ்: ஈரோ மில்லியன் விளையாட்டு! மீண்டும் ஒரு மில்லியன் ஈரோ வென்ற நபர்!!

  ஐரோப்பிய யூனியன் (European Union) நாடுகளான பிரான்ஸ் (France), ஸ்பெயின் (Spain), போர்த்துக்கல்(Portugal) மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் விளையாடப்படும் சர்வதேச சீட்டிழுப்பு (International Lottery) விளையாட்டின், கடந்தவார சீட்டிழுப்பில் பிரான்ஸ் குடியுரிமை கொண்ட  நபர் ஒருவர் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றுள்ளார்.  இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் இதே நபர் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த யூரோமில்லியன் (EuroMillions) விளையாட்டிலும் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றிருந்தார். இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு முறை பரிசை வென்றுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தியுள்ளது.  பிரான்ஸின் அதிகாரப்பூர்வ சீட்டிழுப்பு நிறுவனமான ஃப்ரான்செஸ் டெஸ் ஜியூ (Française des Jeux - FDJ) இவரது இந்த வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் லொட்டரி உலகிலும் இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த பரிசுத்தொகையானது யூரோமில்லியன் (EuroMillions) இன், மை மில்லியன் (My Million) என்ற சிறப்பு பிரெஞ்ச் டிரா (French Draw) மூலம் கிடைத்து...

பாரிஸ்: பிரபல விடுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! சுற்றுலா பயணிகள் எச்சரிக்கை!

  பரிஸ் (Paris), செப்டம்பர் 22, 2025  உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தளமான பாரிஸ்(Paris) நகரின் லியோன் (Gare de Lyon) ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள 12வது வட்டாரத்தில் (12th Arrondissement) உள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்றில் 19 வயது யுவதிக்கு பாலியல் ரீதியில் அநீதி இழைக்கப்பட்டுள்ளமை பாரிஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  பாரிஸ் நகரின் 12ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள மிகப்பிரபலான ரூஃப்டாப் மதுபான விடுதி (Rooftop Bar)-யின் அடித்தளத்தில் (Basement) இந்த பயங்கர சம்பவம் நிகந்துள்ளது. சம்பவ தினமான  20 செப்டம்பர் 2025 சனிக்கிழமையன்று அதிகாலை நான்கு மணியளவில் சம்பவம் இடம்பெற்ற குறித்த விடுதியில் இருந்து காவல்துறையினருக்கு பாலியல் அத்துமீறல் தொடர்பில் புகாரளிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த பெண்ணை மீட்டு பாதுகாப்பளித்தனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து பாதிக்கப்பட்ட பெண் மதுபான விடுதி ஊழியர் (Bar Employee) ஒருவரால் ஏமாற்றப்பட்டு அடித்தளத்தில் (Basement)இ...