பிரான்சின் தலைநகரான பாரிஸில் நேற்றைய தினம் வியாழக் கிழமை இரவு மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த (Seriously Injured) 57 வயதுடைய ஆன் ஒருவர் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலாளி தலைமறைவாகியுள்ளார்(Absconding). சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதானது; குறித்த சம்பவமானது பாரிஸ் நகரின் 7 ஆம் வட்டாரத்திலுள்ள (7th Arrondissement) பிளேஸ் டி பிரெட்டுயில் (Place de Breteuil) பகுதியில் 11 செம்டம்பர் 2025 வியாழக்கிழமை இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலாளி கத்தியைப் பயன்படுத்தி தாக்குதலை (Knife Attack) மேற்கொண்ட நிலையிலேயே குறித்த 57 வயது நபர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார், இதனைத் தொடர்ந்து அவ்விடத்திலிருந்த மக்கள் துரிதமாகச் செயற்பட்டு அவசர சேவைப் பிரிவிற்கு(Emergency Services) அழைப்பினை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவருக்கு உரிய நேரத்தில் முதலுதவி(First Aid) வழங்கி வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக பொலிஸார் சம்பவ இடத்தை வந்தடையும் முன்னரே குற்றவாளி தப்பி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தாக்கப்பட்டவர் வைத்தியசாலையில்(Hospital) அதி தீவிர சிகிச்சைப் பிரிவில்(Intensive Care) சிகிச்சை பெற்று வரும் நிலையில் குற்றவாளியைக் கைது செய்ய பொலிஸ் தரப்பில் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் "குற்றவாளி(Culprit)யை விரைவில் கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன," என பரிஸ் காவல்துறை (Paris Police Department) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் பரிஸ் (Paris) நகரில் பொதுமக்கள் பாதுகாப்பு(Public Safety) குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த சில மாதங்களாக பரிஸின் பல்வேறு வட்டாரங்களில் (Arrondissements) கத்திக்குத்து தாக்குதல்கள் (Knife Attacks) அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக, ஓகஸ்ட் 14, 2025 அன்று பரிஸ் நகரின் 18 ஆம் வட்டாரத்தில் (18th Arrondissement) உள்ள பவுல்வார்ட் டி லா சாபெல் (Boulevard de la Chapelle) பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் (Fatal Attack). இதேபோல், ஓகஸ்ட் 20 அன்று பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் (17th Arrondissement) காவல்துறை வீரர்கள் மீது (Police Officers) நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவங்கள் தனிநபர் பகையினால் (Isolated Incident) நிகழ்ந்தவையா அல்லது தீவிரவாத தாக்குதல்களை (Terrorist Attack) போன்ற சந்தேகங்கள் தொடர்பில் பொலிஸார் தரப்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இவ்வாறான அசம்பாவிதங்களை தடுக்க கண்காணிப்பு கமராக்கள் (CCTV Surveillance) மற்றும் மேலதிக காவல்துறை ரோந்து (Police Patrols) மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை (Security Measures) தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதனடிப்பட்டடையில் ஏற்கனவே பிளேஸ் டி பிரெட்டுயில் (Place de Breteuil) பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்கள் (Surveillance Cameras) மூலம் குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பரிஸ் (Paris) நகரில் வசிப்பவர்கள் மற்றும் பாரிஸுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் (Tourists) பொது இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை (Police) அறிவுறுத்தியுள்ளது. ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் அல்லது நடவடிக்கைகளை கண்டால் உடனடியாக அவசர எண்ணான 112 (Emergency Number) அல்லது 17 மூலம் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Comments
Post a Comment