Skip to main content

பிரான்ஸ்: ஆசிரியரிடம் அத்துமீறிய மாணவன்! தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில்!!



புதன்கிழமை, செப்டம்பர் 24, 2025

இன்றைய தினம் பிரான்சின் பாஸ்-ரைன் (Bas-Rhin) மாவட்டத்தில், ஸ்ட்ராஸ்போர்க் (Strasbourg) நகருக்கு அருகே உள்ள பென்ஃபெல்ட் (Benfeld) என்ற சிறிய நகரில் உள்ள  ராபர்ட்-ஷூமன் கல்லூரியில் (Collège Robert-Schuman) ஆசிரியர் ஒருவரை அதே கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் தாக்கியுள்ளார். 

இன்று காலை 8:15 மணியளவில் குறித்த கல்லூரியில் பயிலும் 14 வயதுடைய மாணவன் கல்லூரியில் சங்கீத ஆசிரியராக பணியாற்றும்  66 வயதுடைய பெண் ஆசிரியரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பிரான்ஸ் கல்வி முறையில் (Système éducatif français) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

பிரான்ஸ் அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் (Établissement public) இந்த பள்ளியில் சுமார் 800 மாணவர்கள்  கல்வி கற்கின்றனர். வழக்கம் போல இன்று  ஆசிரியர் மற்றும் மாணவர்கள்  சங்கீத பாட கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது மேற்குறித்த மாணவன் தீடிரென ஆசிரியருக்கு முன் கத்தியுடன் வந்து ஆசிரியரின் முகத்தில் தாக்கியுள்ளார், அடுத்த கணமே தனது துவிச்சக்கர வண்டியில் கல்லூரி வளாகத்தை விட்டு தப்பி ஓடியுமுள்ளார். 

இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு பொது இடத்தில் வைத்து தப்பி சென்ற மாணவன் கைது செய்யப்பட்டார். மாணவனின் இந்த நடத்தைக்கு பின்னணியில் பயங்கரவாத தொடர்பு (Lien terroriste) இருக்கிறதா என்பது தொடர்பிலான விசாரணைகளை தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் (Parquet national antiterroriste) முன்னெடுத்துள்ளது. 

காயமடைந்த ஆசிரியருக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக ஸ்ட்ராஸ்போர்க் மருத்துவமனைக்கு (Centre hospitalier de Strasbourg) கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு உயிராபத்துகள் எதுவும் இல்லை என ஹோட்பியர் மருத்துவமனை (Hôpital de Hautepierre) தரப்பு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. வைத்தியசாலையின் அவசர மருத்துவ குழு (Pompiers et SAMU) உடனடியாக தேவையான சிகிச்சைகளை வழங்கியுள்ளனர். 

பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதான 14 வயது மாணவன் தனது கழுத்தில் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனையடுத்து அவருக்கும் முதலுதவி வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக டிராகன் 67 ஹெலிகாப்டர் (Dragon 67 hélicoptère) மூலம் ஸ்ட்ராஸ்போர்க் மருத்துவமனையின் (CHU de Strasbourg Hautepierre) அவசர சிகிச்சைப் பிரிவிற்கு எடுத்து செல்லப்பட்டார். மாணவனின் உடல் நிலை குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. 

விசாரணைகளில் இருந்து இந்த மாணவன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்(Profil perturbé) என்றும், முன்னர் உளநல பிரச்சனைகள் தொடர்பில் குடும்ப பராமரிப்பு (Famille d'accueil) நிலையத்தில் பராமரிக்கப்பட்டு பின்னர் பேய் (Foyer) போன்ற அமானுஷ்யம் சார்ந்த உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் மையத்திற்கு மாற்றப்பட்டார் என்றும் தெரியவந்துள்ளது. 

மேலும் பள்ளி சுவர்களில் நாஜி டேக்குகளை (Tags nazis) வரைந்ததாகவும், ஹிட்லரால் (Fasciné par Hitler) உளரீதியாக தீவிரமாக ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு பின்னணியில் பயங்கரவாத தூண்டுதல்  (Incitement terroriste) உண்டா அல்லது தீவிரவாத கருத்துக்களுடன் (Idéologie extrémiste) தொடர்புடையவரா போன்ற கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 


Comments

Popular posts from this blog

பிரான்ஸ்: கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து! 17 பேர் படுகாயம்!!

  தெற்கு பிரான்சின் லோட் (Lot) மாவட்டத்தில் உள்ள கஹோர்ஸ் (Cahors) நகரில், நிகழ்ந்த பயங்கர விபத்து ஒன்றில் 17 பாடசாலை மாணவர்கள்  படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை செப்டம்பர் 15 2025  காலை 07.20 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பாடசாலை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.  விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, செமின் டெஸ் டுராண்ட்ஸ் (Chemin des Durands) பகுதியில், லெஸ் ஜூனீஸ் (Les Junies) என்ற ஊரிலிருந்து கஹோர்ஸ் (Cahors) நகர மையத்திற்கு சென்று கொண்டிருந்த எவிடென்ஸ் (Évidence) நிறுவனத்தின் 16 எண் பேருந்து (Bus line 16) திடீரென கட்டுப்பாட்டை இழந்து வழி மாறி மரம்(Arbre) ஒன்றில் மோதியது.  வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதி உயர் வேகத்தில் மரத்தில் மோதியதால் பேருந்து திரும்பி விழுந்துள்ளது. அதில்  38 மாணவர்கள் (Collégiens et Lycéens), ஆசிரியர் ஒருவர், மற்றும் பேருந்து சாரதி ஒருவர் என மொத்தமாக 40 பேர் பயணித்தனர். அவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து விபத்து நிகழ்ந்த பிராந்தியத்தின் ஆளுநர் கிளேரா ரௌலின் (Claire Raul...

பிரான்ஸ்: ஈரோ மில்லியன் விளையாட்டு! மீண்டும் ஒரு மில்லியன் ஈரோ வென்ற நபர்!!

  ஐரோப்பிய யூனியன் (European Union) நாடுகளான பிரான்ஸ் (France), ஸ்பெயின் (Spain), போர்த்துக்கல்(Portugal) மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் விளையாடப்படும் சர்வதேச சீட்டிழுப்பு (International Lottery) விளையாட்டின், கடந்தவார சீட்டிழுப்பில் பிரான்ஸ் குடியுரிமை கொண்ட  நபர் ஒருவர் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றுள்ளார்.  இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் இதே நபர் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த யூரோமில்லியன் (EuroMillions) விளையாட்டிலும் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றிருந்தார். இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு முறை பரிசை வென்றுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தியுள்ளது.  பிரான்ஸின் அதிகாரப்பூர்வ சீட்டிழுப்பு நிறுவனமான ஃப்ரான்செஸ் டெஸ் ஜியூ (Française des Jeux - FDJ) இவரது இந்த வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் லொட்டரி உலகிலும் இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த பரிசுத்தொகையானது யூரோமில்லியன் (EuroMillions) இன், மை மில்லியன் (My Million) என்ற சிறப்பு பிரெஞ்ச் டிரா (French Draw) மூலம் கிடைத்து...

பிரான்ஸ்: உணவகத்தில் ஏற்பட்ட விபத்து! காயங்களுடன் தப்பிய வாடிக்கையாளர்கள்!!

  பிரான்சின் Juvisy-sur-Orge (Essonne) நகரில் செப்டம்பர் 13, 2025 சனிக்கிழமையன்று நண்பகல் காரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து Gare de Juvisy-sur-Orge (Juvisy-sur-Orge ரயில் நிலையம்) அருகிலுள்ள fast-food உணவகத்தின் (restaurant fast-food) கண்ணாடி வாசலை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.  சம்பவம் குறித்து தெரியவருவதாவது, காரின் சாரதியான 95  வயது முதியவருக்கு காரை செலுத்திக் கொண்டிருக்கும் பொழுது திடீரென மயக்க நிலை ஏற்பட்டதால் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்குள் பாய்ந்துள்ளது.  விபத்தின் போது உணவகத்திற்குள் இருந்த வாடிக்கையாளர்களை சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன இருப்பினும் எவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாக்கவில்லை என காவல்துறை  (police Juvisy-sur-Orge) தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.  Juvisy-sur-Orge ரயில் நிலையம் (Gare de Juvisy-sur-Orge), பாரிஸ் (Paris) நகருக்கு அருகிலுள்ள , இந்த நகரத்தின் மிகவும் நெரிசல் நிறைந்த இடங்களில் ஒன்று. தினசரி கிட்டத்தட்ட 90,000 பயணிகள் (voyageurs RER) RER D மற்றும் RER B ரயில்கள் மூலம் பயணம் செய்...