Skip to main content

வன்முறைத் தாக்குதல் திட்டம் முறியடிப்பு: பாரிஸ் பகுதியில் சிறுவர்கள் கைது, வழக்கு பதிவு!



பாரிஸ் நகரை அண்மித்த பகுதிகள் உற்பட பிரான்ஸின் பல பகுதிகளில் ஜிஹாதி (Jihadist)பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதாக, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையானது செப்டம்பர் 8ஆம் திகதி திங்கட் கிழமையன்று இடம்பெற்றுள்ளது. 

கைதானவர்களில் 16 வயதுடைய சிறுவன் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) போன்ற பயங்கரவாதக் குழுவுடன் இணைந்து செயற்படுவதாகவும் ஒன்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாத சம்பவங்களை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிமையை தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த சிறுவன் நீதிமன்ற கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 

இதன் போது கைதான மற்றொரு காவல்துறையினரால் விடுதலை செய்யப்பட்டதோடு அவர் மீது எவ்விதமான வழக்குகளும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. இதே வழக்கில் சார்த் மற்றும் பாரிஸ் நகர் பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் Sarthe பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இன்னொரு சிறுவனும் செப்டெம்பர் 1ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு காவல்துறை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார். 

பின்னர் குறித்த சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து அவர் "ரிட்டோர் டி ஃப்லம்ஸ்" (Retour de Flammes - Backlash) அல்லது "ஓய் பூர் ஒயில், டென் பூர் டென்" (Œil pour Œil, Dent pour Dent - An Eye for an Eye, a Tooth for a Tooth) என்ற கோட் பெயர்களுடன், பெட்ரோல் (Gasoline) பயன்படுத்தி

பள்ளிகளை (Schools) சுட்டேற்றுதல், பாரிஸ் (Paris) தூதரகங்கள் (Embassies) - இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தூதரகங்கள் (Israeli and US Embassies) -, ஐரோப்பிய பாராளுமன்றம் (European Parliament), காவல் நிலையங்கள் (Police Stations), நைட் கிளப்புகள் (Nightclubs) ஆகியவற்றை இலக்காகக் கொண்ட தாக்குதல்களை (Attacks) திட்டமிட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது. 

கைதான மூவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) அமைப்பின் ரேடிகலிசேஷன் (Radicalization)இன் கீழ் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்தின் (French Interior Ministry) தரவுகளின்படி 2025 செப்டம்பர் வரை 14 சிறுவர்கள் (Minors in Terrorism) பயங்கரவாதம் தொடர்பிலான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். 

இது 2023- ஆம் ஆண்டில் 15 ஆக இருந்தது, 2024-ஆம் ஆண்டில் 18 ஆக இருந்தது. இந்த தரவுகளை வைத்து பார்க்கும் போது பிரான்ஸிலுள்ள சிறுவர்கள் மீது பயங்கரவாத குழுக்களின் செல்வாக்கு அதிகரித்து வருவது மிகத் தெளிவாக உறுதி செய்யப்படுகிறது.  

மேலதிக விசாரணைகள் டி.ஜி.எஸ்.ஐ (DGSI) மற்றும் பி.என்.ஏ.டி (PNAT) ஆகிய அமைப்புகளால் (Organizations) தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் சான்றுகள் (Digital Evidence) - சமூக ஊடகங்கள் (Social Media) மற்றும் செய்திகள் (Messages) - மூலம் பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடைய மேலும் பலர் இருக்கலாம் என்ற கோணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவக்கைகள் மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டனர். 

பிரான்சில் தற்போது பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தீவிரமாகியுள்ள நிலையில், சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் (European Union) பயங்கரவாதம் (Terrorism) பரவல் மற்றும் சிறுவர்களின் தீவிரவாதமயமாக்கல் (Youth Radicalization) பற்றிய விவாதங்களை (Discussions) தூண்டியுள்ளது. மேலும் விவரங்களுக்கு, பிரான்ஸ் செய்தி ஏஜென்சிகள் (French News Agencies) - லி பாரிஸியன் (Le Parisien), ஃப்ரான்ஸ் இன்ஃபோ (France Info) - தளங்களைப் பார்க்கவும்.


Comments

Popular posts from this blog

பிரான்ஸ்: கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து! 17 பேர் படுகாயம்!!

  தெற்கு பிரான்சின் லோட் (Lot) மாவட்டத்தில் உள்ள கஹோர்ஸ் (Cahors) நகரில், நிகழ்ந்த பயங்கர விபத்து ஒன்றில் 17 பாடசாலை மாணவர்கள்  படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை செப்டம்பர் 15 2025  காலை 07.20 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பாடசாலை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.  விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, செமின் டெஸ் டுராண்ட்ஸ் (Chemin des Durands) பகுதியில், லெஸ் ஜூனீஸ் (Les Junies) என்ற ஊரிலிருந்து கஹோர்ஸ் (Cahors) நகர மையத்திற்கு சென்று கொண்டிருந்த எவிடென்ஸ் (Évidence) நிறுவனத்தின் 16 எண் பேருந்து (Bus line 16) திடீரென கட்டுப்பாட்டை இழந்து வழி மாறி மரம்(Arbre) ஒன்றில் மோதியது.  வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதி உயர் வேகத்தில் மரத்தில் மோதியதால் பேருந்து திரும்பி விழுந்துள்ளது. அதில்  38 மாணவர்கள் (Collégiens et Lycéens), ஆசிரியர் ஒருவர், மற்றும் பேருந்து சாரதி ஒருவர் என மொத்தமாக 40 பேர் பயணித்தனர். அவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து விபத்து நிகழ்ந்த பிராந்தியத்தின் ஆளுநர் கிளேரா ரௌலின் (Claire Raul...

பிரான்ஸ்: ஈரோ மில்லியன் விளையாட்டு! மீண்டும் ஒரு மில்லியன் ஈரோ வென்ற நபர்!!

  ஐரோப்பிய யூனியன் (European Union) நாடுகளான பிரான்ஸ் (France), ஸ்பெயின் (Spain), போர்த்துக்கல்(Portugal) மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் விளையாடப்படும் சர்வதேச சீட்டிழுப்பு (International Lottery) விளையாட்டின், கடந்தவார சீட்டிழுப்பில் பிரான்ஸ் குடியுரிமை கொண்ட  நபர் ஒருவர் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றுள்ளார்.  இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் இதே நபர் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த யூரோமில்லியன் (EuroMillions) விளையாட்டிலும் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றிருந்தார். இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு முறை பரிசை வென்றுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தியுள்ளது.  பிரான்ஸின் அதிகாரப்பூர்வ சீட்டிழுப்பு நிறுவனமான ஃப்ரான்செஸ் டெஸ் ஜியூ (Française des Jeux - FDJ) இவரது இந்த வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் லொட்டரி உலகிலும் இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த பரிசுத்தொகையானது யூரோமில்லியன் (EuroMillions) இன், மை மில்லியன் (My Million) என்ற சிறப்பு பிரெஞ்ச் டிரா (French Draw) மூலம் கிடைத்து...

பாரிஸ்: பிரபல விடுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! சுற்றுலா பயணிகள் எச்சரிக்கை!

  பரிஸ் (Paris), செப்டம்பர் 22, 2025  உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தளமான பாரிஸ்(Paris) நகரின் லியோன் (Gare de Lyon) ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள 12வது வட்டாரத்தில் (12th Arrondissement) உள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்றில் 19 வயது யுவதிக்கு பாலியல் ரீதியில் அநீதி இழைக்கப்பட்டுள்ளமை பாரிஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  பாரிஸ் நகரின் 12ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள மிகப்பிரபலான ரூஃப்டாப் மதுபான விடுதி (Rooftop Bar)-யின் அடித்தளத்தில் (Basement) இந்த பயங்கர சம்பவம் நிகந்துள்ளது. சம்பவ தினமான  20 செப்டம்பர் 2025 சனிக்கிழமையன்று அதிகாலை நான்கு மணியளவில் சம்பவம் இடம்பெற்ற குறித்த விடுதியில் இருந்து காவல்துறையினருக்கு பாலியல் அத்துமீறல் தொடர்பில் புகாரளிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த பெண்ணை மீட்டு பாதுகாப்பளித்தனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து பாதிக்கப்பட்ட பெண் மதுபான விடுதி ஊழியர் (Bar Employee) ஒருவரால் ஏமாற்றப்பட்டு அடித்தளத்தில் (Basement)இ...