Skip to main content

பாரிஸ்: மழையுடன் மலர்ந்த இலையுதிர் காலம்! சுற்றுலாப் பயணிகள் தவற விடக்கூடாத தருணம்!

 

செப்டம்பர் 22, 2025 இன்று முதல் பிரான்சில் இலையுதிர்காலம் (L’automne) காலம் ஆரம்பமாகிறது என பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் (Météo France) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உள்ளூர் நேரப்படி மாலை 8:19 மணிக்கு (19:19 UTC) சூரியனின் சமநிலை நிகழ்வு (Équinoxe d’automne) நிகழ்கிறது. இது வடக்கு பந்தையில் (Hémisphère Nord) இலையுதிர்காலத்தின் (Automne) முறையான ஆரம்பத்தைக் குறிக்கிறது.

இந்த பருவத்தில் வெப்பநிலை மெது மெதுவாகக் குறைந்து அடுத்து வரும் வாரங்களில் மழை நாட்கள் (Jours de pluie)  அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இலையுதிர் காலத்தின் ஆரம்ப நாட்களான இந்த வாரத்தில் பிரான்ஸின் வடக்கு பகுதிகளில் (Nord de la France) அடர்த்தியான மழை (Précipitations intenses) பதிவாகும் என பிரான்ஸ் வானிலை மையம் (Météo France) எச்சரிக்கை விடுத்துள்ளது. 

செப்டம்பர் 20 ஆம் திகதி வரை வெப்பமான காற்று (Air estival) நிலவியது என்றாலும், செப்டம்பர் 21 முதல் குளிர்ந்த காற்று (Air frais) பரவத் தொடங்கியுள்ளது. இதனால் வெப்பநிலை 2-3°C குறைவாக (Températures inférieures aux normales) காணப்படுகிறது. இருப்பினும் பகல் நேரங்களில் தேவையான அளவு சூரிய ஒளி (Ensoleillement suffisant) கிடைக்கும், மேலும் நண்பகல் முதல் 20 முதல் 90 மி.மீ வரை மழை (Pluie de 20 à 90 mm) பெய்ய வாய்ப்புள்ளது.

செப்டம்பர் மாதம் முழுவதும், பிரான்ஸில் (France) சராசரி வெப்பநிலை 13°C முதல் 22°C வரை இருக்கும், மேலும் 3 முதல் 8 நாட்கள் மழை (Jours de pluie) எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலநிலை மாற்றத்தால்  விவசாயிகள் (Agriculteurs français) விளைநிலங்களில் பயிர் பாதுகாப்பு (Protection des cultures) தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி வரலாம்.  

ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு(Touristes en France) பிரான்சில் இலையுதிர் காலம் என்பது அற்புதமான அனுபவமாக இருக்கும். இலையுதிர் காலத்தில் பழமை வாய்ந்த கட்டிடங்களுக்கு நடுவே சாரல் மழையில், உதிர்ந்த இலைகளின்((Feuilles d’automne) அழகை காண்பது மறக்க முடியாத நினைவாக இருக்கும். 








 

Comments

Popular posts from this blog

பிரான்ஸ்: கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து! 17 பேர் படுகாயம்!!

  தெற்கு பிரான்சின் லோட் (Lot) மாவட்டத்தில் உள்ள கஹோர்ஸ் (Cahors) நகரில், நிகழ்ந்த பயங்கர விபத்து ஒன்றில் 17 பாடசாலை மாணவர்கள்  படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை செப்டம்பர் 15 2025  காலை 07.20 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பாடசாலை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.  விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, செமின் டெஸ் டுராண்ட்ஸ் (Chemin des Durands) பகுதியில், லெஸ் ஜூனீஸ் (Les Junies) என்ற ஊரிலிருந்து கஹோர்ஸ் (Cahors) நகர மையத்திற்கு சென்று கொண்டிருந்த எவிடென்ஸ் (Évidence) நிறுவனத்தின் 16 எண் பேருந்து (Bus line 16) திடீரென கட்டுப்பாட்டை இழந்து வழி மாறி மரம்(Arbre) ஒன்றில் மோதியது.  வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதி உயர் வேகத்தில் மரத்தில் மோதியதால் பேருந்து திரும்பி விழுந்துள்ளது. அதில்  38 மாணவர்கள் (Collégiens et Lycéens), ஆசிரியர் ஒருவர், மற்றும் பேருந்து சாரதி ஒருவர் என மொத்தமாக 40 பேர் பயணித்தனர். அவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து விபத்து நிகழ்ந்த பிராந்தியத்தின் ஆளுநர் கிளேரா ரௌலின் (Claire Raul...

பிரான்ஸ்: ஈரோ மில்லியன் விளையாட்டு! மீண்டும் ஒரு மில்லியன் ஈரோ வென்ற நபர்!!

  ஐரோப்பிய யூனியன் (European Union) நாடுகளான பிரான்ஸ் (France), ஸ்பெயின் (Spain), போர்த்துக்கல்(Portugal) மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் விளையாடப்படும் சர்வதேச சீட்டிழுப்பு (International Lottery) விளையாட்டின், கடந்தவார சீட்டிழுப்பில் பிரான்ஸ் குடியுரிமை கொண்ட  நபர் ஒருவர் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றுள்ளார்.  இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் இதே நபர் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த யூரோமில்லியன் (EuroMillions) விளையாட்டிலும் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றிருந்தார். இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு முறை பரிசை வென்றுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தியுள்ளது.  பிரான்ஸின் அதிகாரப்பூர்வ சீட்டிழுப்பு நிறுவனமான ஃப்ரான்செஸ் டெஸ் ஜியூ (Française des Jeux - FDJ) இவரது இந்த வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் லொட்டரி உலகிலும் இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த பரிசுத்தொகையானது யூரோமில்லியன் (EuroMillions) இன், மை மில்லியன் (My Million) என்ற சிறப்பு பிரெஞ்ச் டிரா (French Draw) மூலம் கிடைத்து...

பாரிஸ்: பிரபல விடுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! சுற்றுலா பயணிகள் எச்சரிக்கை!

  பரிஸ் (Paris), செப்டம்பர் 22, 2025  உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தளமான பாரிஸ்(Paris) நகரின் லியோன் (Gare de Lyon) ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள 12வது வட்டாரத்தில் (12th Arrondissement) உள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்றில் 19 வயது யுவதிக்கு பாலியல் ரீதியில் அநீதி இழைக்கப்பட்டுள்ளமை பாரிஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  பாரிஸ் நகரின் 12ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள மிகப்பிரபலான ரூஃப்டாப் மதுபான விடுதி (Rooftop Bar)-யின் அடித்தளத்தில் (Basement) இந்த பயங்கர சம்பவம் நிகந்துள்ளது. சம்பவ தினமான  20 செப்டம்பர் 2025 சனிக்கிழமையன்று அதிகாலை நான்கு மணியளவில் சம்பவம் இடம்பெற்ற குறித்த விடுதியில் இருந்து காவல்துறையினருக்கு பாலியல் அத்துமீறல் தொடர்பில் புகாரளிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த பெண்ணை மீட்டு பாதுகாப்பளித்தனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து பாதிக்கப்பட்ட பெண் மதுபான விடுதி ஊழியர் (Bar Employee) ஒருவரால் ஏமாற்றப்பட்டு அடித்தளத்தில் (Basement)இ...