Skip to main content

பாரிஸில் நடந்த விபத்து! ஆபத்தாகும் நடை பாதைகள்!!

 

பிரான்ஸ், பாரிஸ் நகரின் ஆறாம் வட்டார (6th Arrondissement)  பகுதியில் நாம் நினைத்து பார்த்திடாததொரு விசித்திர விபத்து (Accident) நேர்ந்துள்ளது. 15 செப்டம்பர் 2025 திங்கட்கிழமை அன்று நடந்த இந்த வினோத சம்பவம் இப்படியெல்லாம் விபத்து நடக்குமா...? என அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இளைஞர் ஒருவர் நடைபாதையில் (Sidewalk) நடந்து சென்றுகொண்டிருந்த வேளை அந்த நடைபாதைக்கு மிக அருகிலிருந்த கட்டடம் ஒன்றின் பால்கனியில் (Balcony) தொங்கவிடப்பட்டிருந்த பழமையான அலங்கார விளக்கு (Antique Lamp) திடீரென அவ்விடத்தை கடக்க முற்பட்ட மேற்குறித்த இளைஞரின் தலையில் விழுந்துள்ளது. இந்த எதிர்பாராத விபத்து பாரிசில் பொது பாதுகாப்பு (Public Safety) மற்றும் பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது. 

பாரிஸின் அதிக பரபரப்பான நடைபாதைகளில் ஒன்றான ஆறாவது வட்டாரத்தில் அமைந்துள்ள இந்த நடைபாதையில் சம்பவ தினத்தன்று விபத்துக்குள்ளான இளைஞர் நடந்து வந்து கொண்டிருந்தார், உலகின் பழம்பெரும் நகரங்களில் ஒன்றான பாரிஸில் பழமையை நிலைநாட்டும் அலங்கார வேலைப்பாடுகள் இன்றளவும் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் நடை பாதையையொட்டி அமைந்திருந்த ஒரு பழமையான கட்டிடத்தில் தொங்க விடப்பட்டிருந்த பழமையான அலங்கார விளக்கு அறுந்து குறித்த இளைஞரின் தலையில் விழுந்ததால் அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. உடனே குறித்த பகுதியில் வீதியில், கடைகளில் இருந்த பொது மக்கள் அவ்விடத்திற்கு விரைந்து இளைஞருக்கு உதவியுள்ளனர்.  

அளவுக்கதிகமான குருதி பெருக்கெடுத்த நிலையில் அவசர உதவிக்கு
ழு, மற்றும் அவசர மருத்துவ சேவைக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் இளைஞரை மீட்டு அருகில் உள்ள வைத்திய சாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

குறித்த இளைஞருக்கு உயிராபத்தோ அல்லது பலத்த காயங்களோ இல்லை என சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், இருப்பினும் இவ்விபத்து மக்களிடையே பாரிஸின் பழமை பெருமையா? அல்லது ஆபத்தா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

“பொது சொத்துக்களையும் (Public Property) தனியார் சொத்துக்களையும் (Private Property) சரியான முறையில் பராமரிப்பது (Maintenance) மிகவும் முக்கியம். இதுபோன்ற விபத்துகள் (Accidents) தவிர்க்கப்பட வேண்டும்,” என அப்பகுதி மேயர் (Mayor) அதிருப்தி (Displeasure) வெளியிட்டுள்ளார். 

மேலும்,  பரிஸ் (Paris) நகராட்சி (Municipality) இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, கட்டிட பராமரிப்பு (Building Maintenance) மற்றும் பொது பாதுகாப்பு (Public Safety) விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆறாவது வட்டாரத்தின் (6th Arrondissement) மேயர் (Mayor),  குறித்த பகுதியில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் (Public Places),  தனியார் கட்டிடங்களிலும் (Private Buildings) உள்ள அலங்கார பொருட்கள் (Decorative Items) மற்றும் விளக்குகளின் (Lamps) பாதுகாப்பு (Safety) குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். 

மேலும், பரிஸ் (Paris) நகரில் உள்ள பழமையான கட்டிடங்களில் (Historic Buildings) பயன்படுத்தப்படும் அலங்கார விளக்குகளின் (Decorative Lamps) பராமரிப்பு (Maintenance) மற்றும் பாதுகாப்பு (Safety) நிலையை உறுதி செய்ய, ஒரு சிறப்பு குழுவும் (Special Committee) அமைக்கப்படவுள்ளது.


Comments

Popular posts from this blog

பிரான்ஸ்: கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து! 17 பேர் படுகாயம்!!

  தெற்கு பிரான்சின் லோட் (Lot) மாவட்டத்தில் உள்ள கஹோர்ஸ் (Cahors) நகரில், நிகழ்ந்த பயங்கர விபத்து ஒன்றில் 17 பாடசாலை மாணவர்கள்  படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை செப்டம்பர் 15 2025  காலை 07.20 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பாடசாலை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.  விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, செமின் டெஸ் டுராண்ட்ஸ் (Chemin des Durands) பகுதியில், லெஸ் ஜூனீஸ் (Les Junies) என்ற ஊரிலிருந்து கஹோர்ஸ் (Cahors) நகர மையத்திற்கு சென்று கொண்டிருந்த எவிடென்ஸ் (Évidence) நிறுவனத்தின் 16 எண் பேருந்து (Bus line 16) திடீரென கட்டுப்பாட்டை இழந்து வழி மாறி மரம்(Arbre) ஒன்றில் மோதியது.  வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதி உயர் வேகத்தில் மரத்தில் மோதியதால் பேருந்து திரும்பி விழுந்துள்ளது. அதில்  38 மாணவர்கள் (Collégiens et Lycéens), ஆசிரியர் ஒருவர், மற்றும் பேருந்து சாரதி ஒருவர் என மொத்தமாக 40 பேர் பயணித்தனர். அவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து விபத்து நிகழ்ந்த பிராந்தியத்தின் ஆளுநர் கிளேரா ரௌலின் (Claire Raul...

பிரான்ஸ்: ஈரோ மில்லியன் விளையாட்டு! மீண்டும் ஒரு மில்லியன் ஈரோ வென்ற நபர்!!

  ஐரோப்பிய யூனியன் (European Union) நாடுகளான பிரான்ஸ் (France), ஸ்பெயின் (Spain), போர்த்துக்கல்(Portugal) மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் விளையாடப்படும் சர்வதேச சீட்டிழுப்பு (International Lottery) விளையாட்டின், கடந்தவார சீட்டிழுப்பில் பிரான்ஸ் குடியுரிமை கொண்ட  நபர் ஒருவர் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றுள்ளார்.  இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் இதே நபர் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த யூரோமில்லியன் (EuroMillions) விளையாட்டிலும் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றிருந்தார். இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு முறை பரிசை வென்றுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தியுள்ளது.  பிரான்ஸின் அதிகாரப்பூர்வ சீட்டிழுப்பு நிறுவனமான ஃப்ரான்செஸ் டெஸ் ஜியூ (Française des Jeux - FDJ) இவரது இந்த வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் லொட்டரி உலகிலும் இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த பரிசுத்தொகையானது யூரோமில்லியன் (EuroMillions) இன், மை மில்லியன் (My Million) என்ற சிறப்பு பிரெஞ்ச் டிரா (French Draw) மூலம் கிடைத்து...

பிரான்ஸ்: உணவகத்தில் ஏற்பட்ட விபத்து! காயங்களுடன் தப்பிய வாடிக்கையாளர்கள்!!

  பிரான்சின் Juvisy-sur-Orge (Essonne) நகரில் செப்டம்பர் 13, 2025 சனிக்கிழமையன்று நண்பகல் காரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து Gare de Juvisy-sur-Orge (Juvisy-sur-Orge ரயில் நிலையம்) அருகிலுள்ள fast-food உணவகத்தின் (restaurant fast-food) கண்ணாடி வாசலை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.  சம்பவம் குறித்து தெரியவருவதாவது, காரின் சாரதியான 95  வயது முதியவருக்கு காரை செலுத்திக் கொண்டிருக்கும் பொழுது திடீரென மயக்க நிலை ஏற்பட்டதால் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்குள் பாய்ந்துள்ளது.  விபத்தின் போது உணவகத்திற்குள் இருந்த வாடிக்கையாளர்களை சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன இருப்பினும் எவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாக்கவில்லை என காவல்துறை  (police Juvisy-sur-Orge) தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.  Juvisy-sur-Orge ரயில் நிலையம் (Gare de Juvisy-sur-Orge), பாரிஸ் (Paris) நகருக்கு அருகிலுள்ள , இந்த நகரத்தின் மிகவும் நெரிசல் நிறைந்த இடங்களில் ஒன்று. தினசரி கிட்டத்தட்ட 90,000 பயணிகள் (voyageurs RER) RER D மற்றும் RER B ரயில்கள் மூலம் பயணம் செய்...