Skip to main content

Posts

பிரான்ஸ்: ஆசிரியரிடம் அத்துமீறிய மாணவன்! தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில்!!

புதன்கிழமை, செப்டம்பர் 24, 2025 இன்றைய தினம் பிரான்சின் பாஸ்-ரைன் (Bas-Rhin) மாவட்டத்தில், ஸ்ட்ராஸ்போர்க் (Strasbourg) நகருக்கு அருகே உள்ள பென்ஃபெல்ட் (Benfeld) என்ற சிறிய நகரில் உள்ள  ராபர்ட்-ஷூமன் கல்லூரியில் (Collège Robert-Schuman) ஆசிரியர் ஒருவரை அதே கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் தாக்கியுள்ளார்.  இன்று காலை 8:15 மணியளவில் குறித்த கல்லூரியில் பயிலும் 14 வயதுடைய மாணவன் கல்லூரியில் சங்கீத ஆசிரியராக பணியாற்றும்  66 வயதுடைய பெண் ஆசிரியரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பிரான்ஸ் கல்வி முறையில் (Système éducatif français) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  பிரான்ஸ் அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் (Établissement public) இந்த பள்ளியில் சுமார் 800 மாணவர்கள்  கல்வி கற்கின்றனர். வழக்கம் போல இன்று  ஆசிரியர் மற்றும் மாணவர்கள்  சங்கீத பாட கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது மேற்குறித்த மாணவன் தீடிரென ஆசிரியருக்கு முன் கத்தியுடன் வந்து ஆசிரியரின் முகத்தில் தாக்கியுள்ளார், அடுத்த கணமே தனது துவிச்சக்க...
Recent posts

பிரான்ஸ்: புலம்பெயர்ந்த நபரின் துணிச்சலான செயல்! இறுதியில் பொலிஸில் சிக்கிய பரிதாபம்!!

22 செப்டம்பர் 2025 அன்று அதிகாலை 5 மணியளவில் தலைநகர் பாரிஸில் புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் நபர் ஒருவர் துணிச்சலாக RATP நிறுவனத்தின் இரவு நேர சேவையில் இருந்த பேருந்து ஒன்றை திருட முற்பட்டுள்ளார்.  பாரிஸின் 15ஆம் வட்டாரத்தில் (15e arrondissement) உள்ள மாண்ட்பார்னாஸ் தொடருந்து நிலையத்தில் (Gare Montparnasse) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தையே இவர் திருட முற்பட்டுள்ளார் இருப்பினும் காவல்துறையினர் இவரை பான்யோலெ (Porte de Bagnolet) பகுதியில் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  RATP நிறுவனத்தின் நேர அட்டவணைக்கு அமைவாக அதிகாலை 5 மணிக்கு இரவு நேர சாரதிகளுக்கான ஒய்வு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இரவு நேர சேவையில் ஈடுபடும் N13 இலக்க பேருந்தின் சாரதி, மாண்ட்பார்னாஸ் தொடருந்து நிலையத்தில் (Terminus Gare Montparnasse) அதிகாலை 5 மணிக்கு பேருந்தை நிறுத்திவிட்டு வெளியில் சென்றிருந்தார்.  அந்த சமயத்தில், அங்கு தங்கியிருந்த புலம்பெயர்ந்து வந்து வீதிகளில் வசிப்பவர்களில்(Homme SDF Paris) ஒருவர் பேருந்தில் ஏறி, சாரதி இருக்கையி...

பாரிஸ்: மழையுடன் மலர்ந்த இலையுதிர் காலம்! சுற்றுலாப் பயணிகள் தவற விடக்கூடாத தருணம்!

  செப்டம்பர் 22, 2025 இன்று முதல் பிரான்சில் இலையுதிர்காலம் (L’automne) காலம் ஆரம்பமாகிறது என பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் (Météo France) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உள்ளூர் நேரப்படி மாலை 8:19 மணிக்கு (19:19 UTC) சூரியனின் சமநிலை நிகழ்வு (Équinoxe d’automne) நிகழ்கிறது. இது வடக்கு பந்தையில் (Hémisphère Nord) இலையுதிர்காலத்தின் (Automne) முறையான ஆரம்பத்தைக் குறிக்கிறது. இந்த பருவத்தில் வெப்பநிலை மெது மெதுவாகக் குறைந்து அடுத்து வரும் வாரங்களில் மழை நாட்கள் (Jours de pluie)  அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இலையுதிர் காலத்தின் ஆரம்ப நாட்களான இந்த வாரத்தில் பிரான்ஸின் வடக்கு பகுதிகளில் (Nord de la France) அடர்த்தியான மழை (Précipitations intenses) பதிவாகும் என பிரான்ஸ் வானிலை மையம் (Météo France) எச்சரிக்கை விடுத்துள்ளது.  செப்டம்பர் 20 ஆம் திகதி வரை வெப்பமான காற்று (Air estival) நிலவியது என்றாலும், செப்டம்பர் 21 முதல் குளிர்ந்த காற்று (Air frais) பரவத் தொடங்கியுள்ளது. இதனால் வெப்பநிலை 2-3°C குறைவாக (Températures inférieures aux normales) காணப்...

பாரிஸ்: பிரபல விடுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! சுற்றுலா பயணிகள் எச்சரிக்கை!

  பரிஸ் (Paris), செப்டம்பர் 22, 2025  உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தளமான பாரிஸ்(Paris) நகரின் லியோன் (Gare de Lyon) ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள 12வது வட்டாரத்தில் (12th Arrondissement) உள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்றில் 19 வயது யுவதிக்கு பாலியல் ரீதியில் அநீதி இழைக்கப்பட்டுள்ளமை பாரிஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  பாரிஸ் நகரின் 12ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள மிகப்பிரபலான ரூஃப்டாப் மதுபான விடுதி (Rooftop Bar)-யின் அடித்தளத்தில் (Basement) இந்த பயங்கர சம்பவம் நிகந்துள்ளது. சம்பவ தினமான  20 செப்டம்பர் 2025 சனிக்கிழமையன்று அதிகாலை நான்கு மணியளவில் சம்பவம் இடம்பெற்ற குறித்த விடுதியில் இருந்து காவல்துறையினருக்கு பாலியல் அத்துமீறல் தொடர்பில் புகாரளிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த பெண்ணை மீட்டு பாதுகாப்பளித்தனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து பாதிக்கப்பட்ட பெண் மதுபான விடுதி ஊழியர் (Bar Employee) ஒருவரால் ஏமாற்றப்பட்டு அடித்தளத்தில் (Basement)இ...

பிரான்ஸ்: அதிரவைத்த கொலை முயற்சி - இராணுவ வீரரின் சைக்கோ குணம்! ஒருவர் பலி!!

செப்டம்பர் 19 ,2025 அன்று  சீன்-எட்-மார்ன் (Seine-et-Marne) மாவட்டத்தில், சூப்பெஸ்-சர்-லோயிங் (Souppes-sur-Loing) நகரில் நிகழ்ந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். தனது சொந்த குடும்பத்தினரையே கொலை செய்ய துணிந்த நபர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.  சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  சூப்பெஸ்-சர்-லோயிங் (Souppes-sur-Loing) நகரின் அமைதியான குடியிருப்புப் பகுதியொன்றில், சம்பவ தினத்தன்று இரவு 7 மணியளவில், சம்பவம் நிகழ்ந்த வீட்டிற்குள் இருந்து "நான் உன்னை கொன்றுவிடுவேன்!" போன்ற மிரட்டும் பாணியிலான வார்த்தைகள் அக்கம் பக்கத்துக்கு வீடுகளில் இருந்தவர்களுக்கு கேட்டுள்ளது.    இதனையடுத்து ஊர் மக்கள் போலீசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த வீட்டிற்குள் செல்ல முற்பட்ட போது நடுத்தர வயது ஆண் ஒருவர் வீட்டை விட்டு வெளியில் வர மறுத்ததோடு காவல்துறையினரையும் தாக்க முற்பட்டுள்ளார்.  குறித்த நபர் 58 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் எனவும் அவர் தனது சொந்த குடும்ப உறுப்பினர்களுக்...

பிரான்ஸ்: தொலைபேசி இணைப்பை முடக்கிய நூதன திருட்டு! DNA மூலம் சிக்கிய குற்றவாளி!!

பிரான்ஸின் சைன் எட் மார்ன் (Seine-et-Marne) மாவட்டத்தில் பாரியளவிலான கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பிரபல தொலைபேசி நிறுவனமான ஒரஞ்ச் (Orange) நிறுவனத்தின் பல்லாயிரம் யூரோ மதிப்பிலான சொத்துக்கள் களவாடப்பட்டுள்ளன. குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய 65347 யூரோ பெறுமதியிலான  7.3 டன் வெண்கல கேபிள்கள் (câbles en bronze) மீட்கப்பட்டுள்ளன.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  கடந்த மார்ச் 29, 2025 அன்று அதிகாலை 01:25 மணியளவில் அச்சேர்ஸ்-லா-ஃபோரெட் (Achères-la-Forêt) என்ற அமைதியான கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரஞ்ச் (Orange) நிறுவனத்தின் தொலைபேசி இணைப்பு (téléphone câbles) அமைப்புகளின் ஒரு டிராப் (trappe) அலாரம் தீடிரென ஒலித்தது.  இதனையடுத்து குறித்த பகுதியை நோக்கி விரைந்த நெமூர்ஸ் (Nemours) PSIG (Peloton de Surveillance et d'Intervention de la Gendarmerie) காவலர்கள், அங்கு முகமூடி அணிந்திருந்த மூன்று கொள்ளையர்கள்  அங்கிருந்த வெண்கல கேபிள்களை வெட்டி எடுத்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர்.  காவல்துறையினர் அவர்களை தடுக்க முற்பட்டபோதும் கொ...

ஒரு கோப்பை பால் - சிறுகதை

அது ஒரு கோடை காலம் அமெரிக்காவின் இந்தியனாவில் மாலைச் சூரியன் மெல்ல மங்கிய ஒளியில் மறைந்து கொண்டிருந்தான். ஒரு சிறிய கிராமத்து பாதையில், பழைய சைக்கிளின் மணி அவ்வப்போது ஆங்காங்கே ஒலித்தது. வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்வது தான் அந்த சிறுவனின் வேலை.  சார்லஸ், வயது பன்னிரண்டு-பதின்மூன்று இருக்கும். நல்ல புத்திசாலி சிறுவன், இயல்பாகவே அறிவியலில் அதீத ஆர்வம் கொண்டவன், வேலை செய்யும் நேரம் தவிர்ந்த மற்ற ஒய்வு நேரங்களில் வீட்டை சுற்றியுள்ள சூழலை ஆராய்வது, பொது நூலகத்தில் புத்தகங்களை இரவல் பெற்று வாசிப்பது என அவனது ஆர்வம் ஒரு கல்வி சமூகத்தை நோக்கி இருந்தது. அது இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய காலம் போர் பற்றிய சலசலப்புகள் பரவலாக ஆங்காங்கே பேசப்பட்டுக் கொண்டிருந்த காலம், நாட்டிலுள்ள மக்களில் சிலர் நாட்டிற்காக தேசப்பற்றோடு இராணுவத்தில் சேர்வார்கள். ஆனால் பலர் அரச சட்டங்களுக்கு கட்டுப்பட்டு கட்டாயத்தின் பெயரில் சேர்க்கப்படுவார்கள். அப்படித்தான் சார்லஸின் தந்தையும் அவனது மூன்று மூத்த சகோதரர்களும் போர் வீரர்களானார்கள். ஆக இப்போதைக்கு சார்லஸ் தான் வீட்டுக்கு மூத்தவன் என்றாகி விட்டது. தாய...