Skip to main content

Posts

பாரிஸ்: RATP, SNCF ஊழியர்கள் வேலை நிறுத்தம்!! தடை ஏற்படும் ரயில், பேருந்து விபரங்கள் உள்ளே!!

  பிரான்ஸில் இன்றைய தினம் 18 செப்டம்பர் 2025 வியாழக்கிழமை பல்வேறு பொதுச்சேவை துறைகளால் முன்னெடுக்கப்படும் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம் போக்குவரத்து சேவைகளிலும் பாரியளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2026 பட்ஜெட் திட்டத்திற்கு (Budget 2026) எதிராக CGT, FO, Unsa-Mobilité, CFE-CGC போன்ற யூனியன் அமைப்புகள் (Syndicats CGT, FO) தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.  மொத்தமாக 8 இலட்சம் பேர் களமிறங்கும் இந்த போராட்டத்தில் RATP (Régie Autonome des Transports Parisiens) மற்றும் SNCF (Société Nationale des Chemins de fer Français) ஊழியர்களும் பங்கேற்கிறார்கள். 90% மெட்ரோ சாரதிகள் மற்றும் 80% RER சாரதிகள் இதில் பங்கேற்க உள்ளதால் போக்குவரத்து சேவை பெருமளவு பாதிக்கப்படுகிறது.  மூடப்படும் மெட்ரோ நிலையங்கள், தடைப்படும் சேவை விபரங்கள்:  பாரிஸ் நகரில் சாரதிகள் தேவையின்றி தானியங்கி (Lignes automatiques) மூலம் இயங்கும் - 1ஆம், 4ஆம், 14ஆம் இலக்கு மெட்ட்ரோக்கள் (Ligne 1, Ligne 4, Ligne 14) தடையின்றி சேவையை வழங்கும்.  7ஆம் மற்றும் 9ஆம் இலக்கு மெட்ரோக்கள் (Ligne 7, Ligne 9)...

தள்ளி விட்டது யார்......??? - சிறுகதை

(முற்றிலும் புனையப்பட்ட கதை) உறையூர் இராச்சியத்தை வரகுண வர்மன் எனும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அவனது நல்லாட்சியில் இராச்சியம் வளம் பெற்று, மக்கள் நலமுற்று செல்வ செழிப்புடன் வாழ்ந்தனர், உணவு, உடை, பொன், பொருள், வைரம், வைடூரியம் என அனைத்து செல்வங்களும் அனைவருக்கும் கொட்டிக்கொடுத்தான் வரகுண வர்மன், மக்களும் மன்னன் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள். மன்னனுக்கு ஒரு மக்கள் இருந்தால் பெயர் மங்கையற்கரசி, பேரழகி, இளவரசிகளுக்கு உரிய அத்தனை அழகும் திறமையும் ஒருங்கே பெற்றவள், மன்னன் எட்டடி என்றால் இளவரசி பதினாறடி மக்களுக்கு வாரி கொடுப்பதில் வள்ளல், அவளது இந்த குணமும் அழகும் அவளை மக்களது செல்லப் பிள்ளையாக ஆக்கியது. இளவரசிக்கு ஓவியம் தீட்டுவதில் பேரார்வம் பறந்து விரிந்திருந்த அரண்மனையில் அவளது ஓவியங்கள் நிறைந்திருக்கும்.  தந்தையின் வெற்றிக்கு கதைகள், ராச்சியத்தில் நடக்கும் பெருவிழாக்கள், விதை விதைப்பு, அறுவடை, கோவில் திருவிழாக்கள், என அத்தனை நிகழ்வுகளையும் ஓவியமாக தீட்டுவாள்,  அவளது மொழி ஓவியம்தான் வாய் பேச இயலாவிட்டாலும் தன தேவையை ஓவியத்தினூடாக உணர்த்திடும் திறமை கொண்...

பிரான்ஸ்: வன்முறை குழுக்களால் ஆபத்து! கடைகளுக்கு காவல்துறை எச்சரிக்கை!!

  பிரான்ஸில் அரசின் 2026 ஆம் ஆண்டிற்கான நிதித் திட்டங்களை எதிர்த்து நாட்டிலுள்ள CFDT, CGT, FO, CFE-CGC, CFTC, UNSA, FSU, Solidaires ஆகிய முக்கியமான எட்டு சங்கங்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் நாளை  18 செப்டம்பர் 2025 வியாழக்கிழமை 'கருப்பு நாள்' (Journée Noire) என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.   ஏற்கனவே செப்டம்பர் 10, 2025 அன்று 'பிளாக் எவ்ரிசிங்' (Bloquons Tout) என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 197,000 முதல் 250,000 பேர் வரை கலந்துகொண்டிருந்த நிலையில் நாளை இடம்பெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 800,000  பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், பாரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்களுக்கு பொலிஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரால் கடை உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சலில் வன்முறை குழுவின் தாக்குதலுக்கு இலக்காகாமல் இருக்க போராட்டம் நடைபெறவுள்ள வழியில் உள்ள அனைத்து கடைகளையும் மூடுமாறு அறிவுறுத்தியுள்ள...

பாரிஸில் நடந்த விபத்து! ஆபத்தாகும் நடை பாதைகள்!!

  பிரான்ஸ், பாரிஸ் நகரின் ஆறாம் வட்டார (6th Arrondissement)  பகுதியில் நாம் நினைத்து பார்த்திடாததொரு விசித்திர விபத்து (Accident) நேர்ந்துள்ளது. 15 செப்டம்பர் 2025 திங்கட்கிழமை அன்று நடந்த இந்த வினோத சம்பவம் இப்படியெல்லாம் விபத்து நடக்குமா...? என அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இளைஞர் ஒருவர் நடைபாதையில் (Sidewalk) நடந்து சென்றுகொண்டிருந்த வேளை அந்த நடைபாதைக்கு மிக அருகிலிருந்த கட்டடம் ஒன்றின் பால்கனியில் (Balcony) தொங்கவிடப்பட்டிருந்த பழமையான அலங்கார விளக்கு (Antique Lamp) திடீரென அவ்விடத்தை கடக்க முற்பட்ட மேற்குறித்த இளைஞரின் தலையில் விழுந்துள்ளது. இந்த எதிர்பாராத விபத்து பாரிசில் பொது பாதுகாப்பு (Public Safety) மற்றும் பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.  சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.  பாரிஸின் அதிக பரபரப்பான நடைபாதைகளில் ஒன்றான ஆறாவது வட்டாரத்தில் அமைந்துள்ள இந்த நடைபாதையில் சம்பவ தினத்தன்று விபத்துக்குள்ளான இளைஞர் நடந்து வந்து கொண்டிருந்தார், உலகின் பழம்பெரும் நகரங்களில் ஒன்றான பாரிஸில் பழமையை நிலைநாட்டும் அலங்கார வேலைப...

பிரான்ஸ்: ஈரோ மில்லியன் விளையாட்டு! மீண்டும் ஒரு மில்லியன் ஈரோ வென்ற நபர்!!

  ஐரோப்பிய யூனியன் (European Union) நாடுகளான பிரான்ஸ் (France), ஸ்பெயின் (Spain), போர்த்துக்கல்(Portugal) மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் விளையாடப்படும் சர்வதேச சீட்டிழுப்பு (International Lottery) விளையாட்டின், கடந்தவார சீட்டிழுப்பில் பிரான்ஸ் குடியுரிமை கொண்ட  நபர் ஒருவர் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றுள்ளார்.  இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் இதே நபர் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த யூரோமில்லியன் (EuroMillions) விளையாட்டிலும் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றிருந்தார். இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு முறை பரிசை வென்றுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தியுள்ளது.  பிரான்ஸின் அதிகாரப்பூர்வ சீட்டிழுப்பு நிறுவனமான ஃப்ரான்செஸ் டெஸ் ஜியூ (Française des Jeux - FDJ) இவரது இந்த வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் லொட்டரி உலகிலும் இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த பரிசுத்தொகையானது யூரோமில்லியன் (EuroMillions) இன், மை மில்லியன் (My Million) என்ற சிறப்பு பிரெஞ்ச் டிரா (French Draw) மூலம் கிடைத்து...

பிரான்சில் துயரச் சம்பவம்! படுகொலை செய்யப்பட்ட ஆண்!!

  நேற்று ஞாயிற்றுக் கிழமை (14 செப்டம்பர் 2025) இரவு 12.30 மணியளவில் பிரான்சின் Fontenay-sous-Bois (Val-de-Marne) நகரில் கொடூரமான படுகொலை சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 40 வயதுடைய ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார். இது பிரான்ஸ் (France) இல் கத்திக்குத்து (couteau attaques)  தாக்குதல்களின் அதிகரிப்பை (hausse des violences) பிரதிபலிக்கிறது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினத்தன்று நள்ளிரவு 12:30 மணி அளவில் Allée du Buisson-de-la-Bergère (அல்லீ டு புய்சோன் டி லா பெர்ஜெர்) பகுதி அருகே, rue Jean-Zay (ரியூ ஜான்-ஜே) மற்றும் avenue Charles-Garcia (அவென்யூ சார்ல்ஸ்-கார்ஸியா) இடுக்கில் மரணித்த 40 வயது ஆண் நின்றிருந்தார்.  அந்த நேரம் கத்தியுடன் அங்கு வந்த இரண்டு இளைஞர்கள்(deux agresseurs) அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். உடலின் பல இடங்களில் ஆழமான காயங்கள் ஏற்படும் வரை தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர், இவ்வாறு அவரது கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட ஆழமான காயம் சம்பவ இடத்திலேயே அவரது உயிரைப் பறித்தது.  அங்கு இடம்பெற்ற அனைத்து சம்பவத்தையும் நேரில் கண்...

பிரான்ஸ்: கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து! 17 பேர் படுகாயம்!!

  தெற்கு பிரான்சின் லோட் (Lot) மாவட்டத்தில் உள்ள கஹோர்ஸ் (Cahors) நகரில், நிகழ்ந்த பயங்கர விபத்து ஒன்றில் 17 பாடசாலை மாணவர்கள்  படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை செப்டம்பர் 15 2025  காலை 07.20 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பாடசாலை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.  விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, செமின் டெஸ் டுராண்ட்ஸ் (Chemin des Durands) பகுதியில், லெஸ் ஜூனீஸ் (Les Junies) என்ற ஊரிலிருந்து கஹோர்ஸ் (Cahors) நகர மையத்திற்கு சென்று கொண்டிருந்த எவிடென்ஸ் (Évidence) நிறுவனத்தின் 16 எண் பேருந்து (Bus line 16) திடீரென கட்டுப்பாட்டை இழந்து வழி மாறி மரம்(Arbre) ஒன்றில் மோதியது.  வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதி உயர் வேகத்தில் மரத்தில் மோதியதால் பேருந்து திரும்பி விழுந்துள்ளது. அதில்  38 மாணவர்கள் (Collégiens et Lycéens), ஆசிரியர் ஒருவர், மற்றும் பேருந்து சாரதி ஒருவர் என மொத்தமாக 40 பேர் பயணித்தனர். அவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து விபத்து நிகழ்ந்த பிராந்தியத்தின் ஆளுநர் கிளேரா ரௌலின் (Claire Raul...